31 மே 2022

ரிஸா


நேற்றைய தினம் 22-05-2022 துபாயில் அமீரக எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் குழுமம் சார்பில் கானல் / Kaanal நடந்த அண்ணன் Sasikumar Ssk அவர்களின் "மெல்லச் சிறகசைத்து" நூல் விமர்சனக் கூட்டத்தில் எல்லார் உள்ளம் கவர்ந்த மழலைக் கண்மணி ரிஸா, பலரும் கூட்டத்தில் உரையாற்றுவதைப் பார்த்து "நானும் ஒரு கதை சொல்லப்போறேன்" என மெல்லிய குரலில் தன் அப்பா ரியாஸ் Riyas Mohamed Ali அவர்களிடம் கொஞ்சமும் தயங்காமல் கேட்டு முன்னே வந்தாள்.
எல்லோர் முன்னே வந்தும்.. "மொதல்ல போட்டோ எடுத்துக்கங்க" என பேசும் முன் சில வினாடிகள் தாமதித்து போட்டோ எடுத்தவுடன் கதையை ஆரம்பித்தாள். கதை சொன்ன விதமும் அவ்வளவு அழகு.
பேசிய உடன் ஒரு டீயை எடுத்துக்கொண்டு நான் போயி வெளியில நின்னு குடிச்சிட்டு வர்ரேன்
என்று டீ'யை கையில் வாங்கிக்கொண்டு சிரித்துக்கொண்டே சென்று பிறகு அப்பாவிடம் குடிச்சிட்டேன் என வந்து சொன்னது எல்லாம் கவிதை.
வருங்காலத்தில் நல்ல ஆளுமை மிக்கவளாக புகழோங்கும் வாழ்வை, தாய் தந்தையருக்கு கண் குளிர்ச்சியான பெருவாழ்வை ரியாஸ் அவர்களின் செல்ல மகள் ரிஸாவிற்கு இறைவன் அருளட்டும். ஆமீன்.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

கருத்துகள் இல்லை: