15 ஜூலை 2022

மருதாணி இரவு



அதே இரவு தான் இன்று,
கையில் உறவுகள் இட்டுவைத்த
மருதாணி நெஞ்சுக்குள்,
வண்ணம் போகாமல்..
வாசனைத் தீராமல்..!


ஆண்டுகள்...
இறக்கைக் கட்டிப் பறந்தாலும்
உள்ளங்கையின் சிவப்பை
உள்ளத்தால் உவந்து மகிழ்கிறேன்.


பச்சை இலைதான் மருதாணி
அதை நினைவுகளால் அரைத்து
அன்போடு குழைத்து பூசும் போது
நிறக்கும் சிவப்பென்பது
மகிழும் மனங்களின்
நுதலில் தெரியும்
இதழின் நகை தான்!


மருதாணி இட்டவர்கள்
கண்ணும் கருத்துமாய்
இருத்தல் அவசியம்!


இருக்கிறோம் நாங்களும் தான்..

கண்ணும் கருத்துமாய்!
என் கைகளில் அவள்
அவள் கைகளில் நானென
சிவந்திருக்கிறோம்.

15-07-2021

 

 

 






எத்தனை ஆண்டுகள் உருண்டோடினாலும்
நெஞ்சைவிட்டுச் செல்வதில்லை
ஒட்டிக்கொண்டு சிவந்த மருதாணி மணம்.

மெஹெந்தி ராத்!


15-07-2020
-ஜா.மு.


கருத்துகள் இல்லை: