26 நவம்பர் 2022

திறமாக்கித் தந்தருள்வாய்!



இறைவா!

தெரியாத நாளை தன்னை
திறமாக்கித் தந்தருள்வாய்!

புரியாத புதிர்களுக்கு
விடையாகித் திரை களைவாய்!

தேவையில்லாச் சிந்தனைகள்
தெறித்தோட வகைச் செய்வாய்!

எது வந்து எதிர்த்தாலும்
அதைத் தீர்க்கும் உரம் அருள்வாய்!

வாழையடி வாழையாக
குலம் செழிக்கக் குணம் இசைவாய்!

வளமைகளும் செழுமைகளும்
வளர்ந்தோங்க நிதம் அருள்வாய்!

உளம் சிறந்த உடல் நலத்தை
உடனாக்கி உயிர் வளர்ப்பாய்!

-ஜா.மு
03-08-2021
10:14pm


கருத்துகள் இல்லை: