23 ஆகஸ்ட் 2012

கண்ணாடி முன் என் நாடி!


அழகே அற்புதமே
தன்னையே தான் ரசிக்கும் நிலவே!

கண்ணாடியில்
முகம் பார்க்கும் கனியே!

என் நாடியே
எழிலே.. பொழிலே..!

குயிலுலக ராகத்தினை
குதூகலத்துடன்
குழலென இசைக்கும்
குலமகனே!

உன்னையே நீ நோக்கி..
உனக்கே நீ
சொல்லிக்கொள்ளும்
உவமைகள் தான் என்ன கண்ணே!

கண்ணோடு கண்ணோக்கி
உன்னையே நீ
காதலுறும் காட்சி தனை
காணயான் களிப்புற்றேன்  கண்ணே!

நான் தான் நீயா என
நீ கேட்க..- உன் பிம்பமும்
நான் தான் நீயாவென
திரும்ப விளிக்கிறதோ..?
உன்னிடம் கண்ணே!

நாளும் பொழுதும் - உன்
பேச்சிலும் கூத்திலும் குறும்பிலும்
நானடைந்த பேற்றினை எங்கனம் சொல்ல!

எனக்காய் நீ!
அருளாய் அவன் தந்த 
கணக்கினை தான் எங்கனம் விள்ள!


-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

கருத்துகள் இல்லை: