18 அக்டோபர் 2013

நல்ல விசயங்கள்



கீழ்காணும் நல்ல விசயங்கள் நான் எழுதியதல்ல.. ஆனால் நான் மொழியாக்கம் செய்தது. 

எனக்கு வந்த மெயிலின் ஆங்கில வாசகங்களை மொழிபெயர்த்தால் நண்பர்களுக்கும் நலம் பயக்கும் என்பதால் மொழியாக்கம் செய்து இங்கே பகிர்கிறேன்.


நாளும் 10 முதல் 30 நிமிடம் வரை நடைபயிற்சி முக்கியம், அதிலும் புன்னகைத்தவாறே நடப்பது மிக நலம், இது நிகரற்ற மன அழுத்தப்போக்கியாகும்.

• ஒவ்வொரு நாளும் குறைந்தது 10 நிமிடமாவது மெளனமாக அமர்ந்து தியானம் செய்க! அறையை தாழிட்டாலும் நலமே.

• கண்டிப்பாக காலந் தவறாமல் தொழுகை செய்க, உடற்பயிற்சியும் வேண்டும்.

• 6 வயதிற்கு குறைந்தவர்களுடனும், 70 வயதினை தாண்டியவர்களுடனும் கலந்து அதிக நேரம் செலவிடுதல் இது மிக முக்கியம்.

• மரத்திலிருந்தும், செடிகொடிகளிலிருந்தும் வரும் உணவை அதிகமாக உண்ணுங்கள், அதிலிருந்து தயாரிக்கப் பட்டதை (சமைக்கப்பட்டதை) குறையுங்கள்.

• பச்சைத் தேனீரும், தண்ணீரும் அதிகம் குடியுங்கள், பாதாம், வால்நட், ப்ரூகூலி அதிகம் சாப்பிடலாம்.

• நளுக்கு குறைந்த பட்சம் 3 பேரையாவது மென்சிரிப்பு செய்திட முயலவும்.

• வீடு, கார், மேஜை இவைகளை குப்பை மேடுகளாய் ஆக்காமல், பூந்தோட்டமாய் அழகாக்கினால் வாழ்வில் புத்துணர்வை கொண்டுவரும்.

• உங்கள் அற்புத ஆற்றலை வீணான அரட்டை, பழங்கதை பேசுதல் அல்லது கழித்து பாழாக்காமல், நேர்மறையாய் சிந்தித்து செயலாற்றுதலில் முதலீடு செய்வோம்.

• அரசனைப் போலே காலை உணவும், குடிமகன் போலே பகல் உணவும், இல்லாத ஏழைப்போல் இரவு உணவும் இருக்க வேண்டும்.

• வாழ்க்கை நமக்கு முழுக்க சாதகமாகவே இல்லாவிட்டாலும், நல்லதாக இருக்கிறது, அதை நம்புங்கள்.

• வாழும் வாழ்க்கையே குறைவான வாழ்நாட்கள் தான் அதை மற்றவர்களை வெறுப்பதில் வீணடித்திட வேண்டாம்.

• வாழ்வில் எதற்கும் நம்மை விட்டால் வேறு ஆள் இல்லை என நீங்களே உங்களை வருத்திக்கொள்ள வேண்டாம், எதையும் யாரும் செய்வார்கள்.

• ஒவ்வொரு வாதத்திலும் நீங்களே வெற்றி பெற எண்ண வேண்டாம், தோல்வியை ஏற்றுக்கொள்ளுங்கள்.

• கடந்த காலம் குறித்து திருப்தி அடையுங்கள், அது உங்கள் நிகழ்காலத்தை மேன்மையாக்கும்.

• எப்போதும் மற்றவர்களோடு உங்களை ஒப்பிட வேண்டாம், ஏனெனில் அவர்களின் வாழ்க்கைப் பயணம் எதை நோக்கி என்பது உங்களுக்கு தெரியாது.

• உங்கள் வாழ்க்கையில் மகிழ்வை உங்களைத் தவிர யாரும் உண்டாக்க முடியாது.

• வாழ்வின் எந்த சோகத்தையும் குறித்து வைத்து கொள்ளுங்கள், அவைகள் 5 வருடங்கள் கழித்துப்பார்த்தால் இருக்குமா?

• எல்லோரையும் மன்னியுங்கள் அவர்கள் எதை செய்த போதிலும்.

• உங்களைப் பற்றி மற்றவர்கள் என்ன சிந்திப்பார்கள் என எண்ணுவது உங்கள் வேலை அல்ல.

• காலம் அனைத்தையும் சிறப்பாக்கும்.

• நல்லதோ, கெட்டதோ அனைத்து சூழ்நிலைகளும் மாறும்.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

கருத்துகள் இல்லை: