22 டிசம்பர் 2019

பூச்செடி



பிறர் கண்குளிர..
காணுமட்டும் மனங்குளிர..
கள்ளமிலாது மயக்கும்
மாய கள் சுமந்து
நேற்றுவரை காற்றோடு
சிரித்தாடி நின்ற
சாலையோரப் பூக்கள்
சகதி மண் அப்பி
தரை நோக்கிக்
கவிழ்ந்து கிடக்கிறது.

கனம் மிகுந்து போனது
முகமிழந்து போனது
பலாத்காரமாய் நீர்ச் சொறிந்து
சென்றுவிட்ட மழையால்!

அழகு போனபின்
ஆவதொன்றுமில்லை யென
ஆணை வந்ததையடுத்து
வேரடி மண்ணோடு
பிடுங்கி எறிந்து
குப்பை லாரியில் ஏற்றுகிறான்
மாநகராட்சி பணியாளன்,
சிரித்திருந்த பூச்செடியை.
நடத் தயாராக இருக்கிறது
வேறொரு சிரிக்கும் பூச்செடி .
ஜா.மு.

கருத்துகள் இல்லை: