22 டிசம்பர் 2019

மழை நாளில்,,,

பெய்யும் மழை
பெய்தே இருக்கவில்லை,
அறையின் கதவை
திறக்கும் வரை.
திறந்தது தான் தாமதம்
"மண்ணில் விழும்
ஒவ்வொரு துளியாயும்
உயிர்த்து பிறப்பது நானா?"
என்றாகிப் போனேன்
***
மழை நாளில்
கொத்திச் சென்றது
கடற்காகம்.
எனைக் கவ்வியிருக்கிறது
அலகில்.
***

மழைக்கென்ன
வானமிருட்ட
இடி மின்னலோடு
அமர்க்களமாய் பெய்துவிட்டு சென்றுவிடுகிறது.
தெருக்கள் பல துரத்த வந்து
அசுத்தத்தோடு தேங்கிய நீரை
போர்க்கால அடிப்படையில்
வெளியேற்றிட
முனிசிபாலிட்டியில் பணி செய்யும்
நம் சோதரர்கள் இரவென்றும் பாராது 
படும் பாடே பெரும் பாடாகிறது!

20thNov'19

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

கருத்துகள் இல்லை: