22 டிசம்பர் 2019

வள்ளுவர் முகம்.



குறள் தான்
வள்ளுவர் முகம்.
அது யார்
கொடுக்கும் உருவங்களையும்
அடிக்கும் வர்ணங்களையும் 
மனம்போன போக்கில் தரும் 
விளக்க அறியாமைகளையும்
உள்வாங்கிக்கொண்டு
வெண்மை ஒளிரும்
வள்ளுவ தீபத்தை மட்டுமே 
உயர்த்திக் காட்டும்.
ஈராயிரம் ஆண்டுகளாய்
இப்படியான இழிநாட்களை
பார்த்திருக்க வில்லையென
உள்ளுக்குள் வள்ளுவர்
ஏளனமாய் நகைப்பதாகவும்
ஏகத்திற்கும் மனச்சோர்வாயுமென
ஓர் இரகசியத் தகவல்.
ஆனாலும் அவர்
நெஞ்சிலும் கொஞ்சம் சமாதானமாம் 
தூயவள்ளுவம் சொல்லும் 
சிலரது வாய்மைக்காய்.
நாம் வள்ளவ நெஞ்சின் சமாதானம்.
- ஜா.மு.
6-11-2019, 11.27pm

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

கருத்துகள் இல்லை: