22 டிசம்பர் 2019

தீர்ந்து விட்டதோ நீதி?

தேடித்தேடி
பார்க்கிறேன்
நீதிபதிகளின் தீர்ப்பில்,
தீர்ந்து விட்டதோ
நீதி?
நீதிமன்றங்கள்
மனுநீதி மன்றங்களான பின்
உச்சத்தின் மீதே
மிச்சமீதி நம்பிக்கையும்
அற்றுவிட்டது!
சட்டத்தின் முன் நாங்கள்
சமமானவர்கள் என்றே
நினைத்திருந்தோம்,
தீர்ப்பாகவே சொல்லிவிட்டார்கள்
"ஒதுக்கியிருக்கும்
அந்த இடத்தில்
ஒதுங்கி நில்"!
வரலாற்றுக்கும்
புனைவிற்கும்
நடந்த வழக்கில்
உண்மைக்கும்
நம்பிக்கைக்கும்
நடந்த வாதத்தில்
புனைவும்
நம்பிக்கையும்
வரலாற்று உண்மையின்
கழுத்தை அறுத்துவிட்டது.
தேசமெங்கும்
சிந்திக்கிடக்கிறது
சத்தியத்தின் இரத்தம்
ஒரே நேரத்தில்
ஓராயிரம் துரோகத்தின்
ஈட்டிகள்
எவ்வளவு தான் தாங்கும்
எங்கள் இதயம்.
- ஜா.மு



கருத்துகள் இல்லை: