27 ஆகஸ்ட் 2011

லைலத்துல் கத்ர் - புஜைரா (26-08-2011)




இன்று புனித லைலத்துல் கத்ர் இரவின் சிறப்புத்தொழுகை அமீரகம் ஃபுஜைராவில் ரம்மியமாக மிக அமைதியான சூழலில் தொழுத அனுபவம் மனதிற்கு நிறைவாய் இருந்தது. தராவீஹ்க்கு பிறகு நல்ல தொரு சிறப்புப் கூட்டு பிரார்த்தனையை இங்குள்ள அரபிய இமாம் ஷேக்.அப்துல் காதிர் அவர்கள் நல்கி இரவு 10.30க்கு தஸ்பீஹ் நஃபீல் என அறிவிப்பு செய்து ஓய்வு அறிவித்தார். திக்ரிலும், ஸலவாத்திலும் சபை இருந்த்தது.பிறகு இரவு 10.30க்கு இமாம் ஷேக்.அப்துல் காதிர் வர அவர் அங்கிருந்த பாக்கிஸ்தானிய இளைஞரை தொழுகை நடத்த ஏவினார். அவர் அழகுற 45 நிமிடத்திற்கும் மேலாக தொழ வைத்தார்.புனித ரமலானின் 'லைலத்துல் கத்ர்' (கண்ணியமிக்க் இரவு) ன் புனிதத்தின் பொருட்டால் உலக அமைதிக்கும், நல வளத்திற்கும், தனிமனித நிம்மதிக்கும், மனத்தூய்மைக்கும், தன்னிறைவடைந்த சிறப்பான வாழ்விற்கும், உள்ளத்தெளிவிற்கும், மிகச்சிறந்த வாழ்வியல் நெறியான இஸ்லாத்தினை தந்த நமது நாயகத்தினை உவப்பு வைப்பதற்கும் என தனது நீண்ட இறை வேட்டலில் (துஆ) அல்லாஹ்வின் திருநாமங்களை கூறி..கூறி.. நபிகளாரை முன் வைத்து துஆ செய்து மஸ்லிஸை நிறைவாக்கினார் இமாம் ஷேக் அப்துல் காதிர் அரபி அவர்கள்.

'லைலத்துல் கத்ர்' அதாவது லைல் என்றால் இரவு கத்ர் என்றால் கண்ணியம் ஆக கண்ணியமிக்க இரவு என்று பெயர். அன்றைய காலத்தில் இஸ்லாமிய அறிஞர்களின் வாயிலாக இதை கேள்விப்பட்ட காந்தியவர்கள் கைத்தறி மூலம் நெய்யும் பருத்தி ஆடைக்கு கண்ணியமிக்க ஆடை என பொருள் படும் கத்ர் ஆடை என்ற பெயரை சூட்டினார் என்பது வரலாறு.

ஜா.முஹையத்தீன் பாட்ஷா

கருத்துகள் இல்லை: