16 டிசம்பர் 2013

முஸஃப்பர் நகர் தொடரும் அவலம்!




சில நாட்களாக தொடர்ச்சியாக காதுகளில் படும் முசஃப்பர் நகர் மக்களின் சோக செய்தி மிகவும் என்னை வருத்தத்தில் ஆழ்த்திய வண்ணமே இருக்கிறது.

மிகக்குளிர்,   ஒதுக்கப்பட்டுள்ள முகாம்  சீதோச நிலைக்கு தகுந்தவாறு உறுதுணை தருவதாய்  இல்லாத காரணத்தினால் தினம் தினம் கூடாரங்களில் கொத்து கொத்தாக கடுங்குளிரால் தக்குபிடிக்க முடியாத பச்சிளம் பாலகர்கள் செத்து மடிகின்றனர். மனதை இது மிகுந்த ரணமாக்குகிறது. இது குறித்து சில நாட்களுக்கு முன் உச்ச நீதிமன்றம் கடும் கண்டனத்தை வெளிப்படுத்தி தகுந்த நடவடிக்கை எடுக்க உத்திரபிரதேச அரசை கேட்டுக் கொண்டும் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை.





அடுத்து முகாம்களில் காளிகள் புகுந்து ஒண்ட இடமில்லாமல் கூடாரங்களில் குறுகிப்போய் வறுமையிலும், இனக் கொடூரங்களிலும் வாடிக்கொண்டிருக்கும் இஸ்லாமிய இளம் பெண்களை குறிப்பார்த்து கொடூரமாய் கற்பை சூரையாடுவதும் தொடர்வதாய் அந்த நிகழ்வுகளும் தொலைக்காட்சி சிலவற்றில் வராமல் இல்லை.

கலவரம் நடந்து சில நாட்களிலேயே கூடாரத்தில் புகுந்து அங்கிருந்த இளைஞரை குறிவைத்து காவியாட்கள் நடத்திய காளியாட்டத்தில் அவர் கொடூரமாக கொல்லப்பட்டதும் அவர்களுக்கும் மூகமில் இருக்கும் இளைஞர்களுக்கும் ஏற்பட்ட மோதல்களும் நினைவிருக்கலாம்.

கலவரத்தால் வாழ்வாதாரம் இழந்த இந்த பராரிகளுக்கு ஒழுங்கான முகாம் கூட அமைத்து தர இந்த அரசிற்கு வக்கில்லை, பல சமூக இயக்கங்கள் முசாபர் நகரை மையப்படுத்தி வசூல் வேட்டை நடத்தினாலும் எந்த அளவிற்கு அவர்களுக்கு ஆருதல் அளிக்கும் வகையில் அது சென்று சேர்கிறது என்பது கேள்விக்குறியே! அங்கனம் அது சென்று சேர்ந்து அவர்களின் துளியளவு இன்னலுக்கு மருந்தானாலும் அது மிக ஆருதலே. அந்த வகையில்  ஒரு ஆருதலான விசயம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் குர்ரம் உமர் அவர்களின் தன்னலம் கருதா சமூக தொண்டு. உமர் அவர்கள் பாதிக்கப்பட்ட அவர்களை பல முறை சென்று தொடர்பு கொண்டு அவ்வப்போது அரசாங்கத்தை அணுகி அவரக்ளுக்கு வேண்டியதை செய்ய சொல்லி குரல் கொடுத்தும், அவரால் இயன்ற பல உதவிகளை செய்தும் வருவது வரவேற்பிற்குறியது, இரண்டு நாட்களுக்கு முன்பு  கூட தங்களால் இயன்ற குளிர் கம்பளங்களை கொண்டு சென்று குளிரால் வாடும் அவர்களுக்கு கொடுத்து வந்தார். அவருக்கு நான் இத்தருணத்தில் நன்றி கூறிக்கொள்வதுடன் துஆவும் செய்கிறேன்.

ஆதரவற்ற என் சமூக மக்களுக்கு விடிவு காலம் எந்நாளோ..? அநீதிகள் மாய்ந்து நீதி அரசாள்வது தான் எந்நாளோ..? புரியவில்லை ஆனால் இதற்கெல்லாம் விடிவென்பது சமூக ஒற்றுமை மூலம் மட்டுமே உண்டாகும். பாசிச சக்திகளில் கைகளில் கொடும் ஆயுதங்கள் நம்மை சாய்ப்பதற்கும், மாய்ப்பதற்கும் இருக்கும் வேலையில் நம் சமூகம் ஓரணியில் ஒன்று சேருமா..?  உணர்ச்சி வசப்படுத்தி மீண்டும் மீண்டும் சமூகத்தை பாதகத்தில் தள்ளும்  இயக்கங்களுடன் சென்று கெடுமா?  அல்லது முஸ்லிம் லீக் போன்ற சாத்வீக அரசியல் அமைப்போடு இச்சமூகம் ஒன்றிணைந்து வெல்ல களம் காணுமா..? என்பதே இன்றைய கேள்வி.


- வழுத்தூர் ஜா. முஹையத்தீன் பாட்ஷா

கருத்துகள் இல்லை: