26 டிசம்பர் 2013

நாணமும்.. விலகலும்!



மஞ்சம் விரித்து
மல்லிகை பரப்பி
மங்கை வரவை
மன்னவன் யான்
மயக்கத்திலே எதிர்நோக்கி
மாய்ந்திருந்தேன்.

தோழியர் கொடுத்த துணிவோடு
கொஞ்சம் கதவு திறந்து
மஞ்சம் நோக்கி
வெட்க‌ப் பஞ்சமில்லமல்
தரை நோக்கி
தாழ்மையுடன் நின்றவளின்,

தங்க வளையல்
தனை அணிந்த‌
தண்டுக்கை வருடி...
தலைவன் யான் இழுத்தேன்.

தேகம் சூடேற,
வேகமாய் வெட்கம் வர‌
நாண தாகத்துடன்
கை இழுத்துக் கொண்டவளை
அணைத்து நான்
அருகே அமர்த்தியது
என் முதலிரவு.

*

காற்றில் புயலாய்
ஊற்றடெடுத்த காமத்தால்
வீற்றிருந்த எனை அழைத்து
மாற்று மொழி கூறி
ஆடை குறைப்பு கூற்றினை அமுல்படுத்தி
இன்பத்தை ஊற்றிக் கொடுத்தாள் - என்
நாற்றடத்தி மார்பினில் சாய்ந்து
இது நேற்றிரவு.

*

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா


எப்போதும் போல் பின் குறிப்பு: 

இந்த கவிதை ஏதோ இன்றோ நேற்றோ எழுதியதல்ல... எல்லா தலைப்புகளிலும் நாம் கவிதை எழுத வேண்டும் என நான் அன்றைய 1997-98 க்களில் எழுதியது. அதாவது எனக்கு திருமணம் ஆவதற்கு சற்றேறக்குறைய பத்து ஆண்டுகளுக்கு முன்.
கொஞ்சம் ராவாக இருக்கிறது என்று நினைத்தால் சாரி!




கருத்துகள் இல்லை: