20 டிசம்பர் 2013

அஹமது நளீருக்கு ஐந்தாம் பிறந்த நாள்!



எங்கள் செல்லக்குட்டி சுல்தான் அஹமது நளீருக்கு இன்று ஐந்தாம் பிறந்த நாள்!

இதே நாளில் இவன் பிறந்த போது நாஙக்ள் அடைந்த சந்தோசத்திற்கு எல்லை இல்லை. 

திருமணம் முடித்து பெறும் முதல் குழந்தை அந்த தலைக்குழந்தை தரும் மட்டற்ற மகிழ்வை ஒரு தகப்பனாக அந்தஸ்து பெற்று புலங்காகிதம் அடைந்து பெறுவது இறைவன் அருளும் பெரும் பேறுகளில் ஒன்று. அந்த ஆனந்த களிப்பை எனக்கு ஊட்டியன் இவன். 

குழந்தை உண்டானதிலிருந்தே என் தாய் தந்தையர் முதன் முதலாக பெற்ற காலத்தில் என்னென்ன ஆனந்தம், அனுபவம் அடைந்திருப்பார்கள் என என்னை ஒவ்வொரு நிலையிலும் சிந்திக்க வைத்தவன். என் தாய் பெற்ற பாட்டை என் மனைவி மூலம் எனக்கு எடுத்துக்காட்டியவன் இவன்.

கண்ணே உன்னை நினைத்து எழுதப்போனால் எழுதி முடிக்க முடியாதடா.. இறைவனருளால் இரண்டு வயதிலிருந்தே பென்சிலோ.. சிலேட்டு குச்சிகளோ பிடிக்காமல் பேனா பிடித்து அகரம் முதல் அனைத்து எழுத்துக்களும் எழுதிக்கற்றாய். உனக்கு பேனா ஒன்று கொடுத்தால் போதும் இரவும் பகலும் எழுத்திக்கொண்டே இருப்பாய். இது உனக்கு இறைவன் அளித்த அருள்.

கண்ணே! நீ நிறை ஞானம் பெற்று சிறப்பாய் சீரோடு வாழ்க!

மணியே! நீ எல்லா அருட் பேறுகளும் பெற்று புகழ் சூழ வாழ்க!

முத்தே! நீ எங்களை மகிழ்வித்து இறையவனும், இறைத்தூதரும் அவர் தம் திருக்குடும்பத்தினரும் உளம் நிறைந்து மகிழும் வண்ணம் வாழ்க!

மகிழம் பூவே! என்றும் நீ நல்ல பூரண உடல் நலத்தோடு பல்லாண்டு.. பல்லாண்டென.. நீண்ட நிறை வாழ்வை நிலத்தினில் பெற்று எல்லோருக்கும் பயன்தரும் சிறப்புயர் செம்மை பெருவாழ்வை பெற்று வாழ்க.

இறைவா! எங்கள் குழக்கொழுந்தை, அருமை மகவை நீ உன் பேரருள் கொண்டு சிறப்பாய் வாழ வை!

எங்கள் உயிரினும் மேலான கண்மனி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களது நல்லாசிகள் சூழ வையமதில் ஆள வை! ஆமீன்.

வாழ்க! வாழ்க!! வாழ்க!!!


( எனது இரண்டு பிள்ளைகளும் பிறந்தது டிசம்பரில் தான்.)


-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

கருத்துகள் இல்லை: