03 ஜனவரி 2015

மீலாது குறித்து அபத்தம், "சமரசம்" சிராஜுல் ஹசனுக்கு பதில்.


மார்க்க அடிப்படையில்
 
நபிகளாரின் பிறந்த நாள் விழா 
(மீலாது விழா)கொண்டாடுவது பித்அத்-
அதாவது நூதன வழிகேடு என்றும்
அதை அறவே தவிர்க்க வேண்டும் என்றும்
அஹ்லே ஹதீஸ் இயக்கக்ததைச் சேர்ந்த
ஆலிம்கள் தொடர்ந்து பரப்புரை செய்து வருகிறார்கள்.
நபிகளாரின் பிறந்த நாள் விழா என்றில்லாமல்
அண்ணல் நபிகளாரை
அறிமுகப்படுத்தும் விழா என்று
நிகழ்ச்சிகளை நடத்தலாமே?
மீலாது விழா என்னும் பெயரில்
பாட்டுக் கச்சேரி, மவ்லூது ஓதுவது,
அன்னதானம் என்றெல்லாம் நடத்துவதால்தான்
சிலர் மீலாதை எதிர்க்கிறார்கள்.
இந்த அநாச்சாரங்களை எல்லாம் தவிர்த்துவிட்டு
நபிகளாரை அறிமுகப்படுத்தும் வகையில்
நிகழ்ச்சிகளை நடத்துவதில்
தவறு இருப்பதாகத் தெரியவில்லை.
-சிராஜுல்ஹஸன்
  • 16 hrs · Like
  • J Mohaideen Batcha இப்போது தான் பார்த்தேன் சிராஜுல் ஹசனின் மீது வைத்திருந்த அபிப்ராயமே போய்விட்டது, என்னய்யா... மீலாதை எதிர்ப்பவர்களின் மனநிலை, உணர்வு, அவர்களின் அரசியல் மற்றும் பின்புலம் இவைகளெல்லாம் தெரியாதவரா இவர்,மேலும் அவர்களின் தவறான வழிநடத்துதலால் இன்று அறிவிழந்த மிக மோசமான இளைஞர் பட்டளத்தை உருவாக்கி இருப்பது சமூகத்திற்கு மிகக் கேடு இல்லையா.. 

    சிராஜுல் ஹசன் மிக முற்போக்கு கருத்தை எடுத்து வைக்கிறார்.. இஸ்லாமியர்கள் படம் எடுத்தால் என்ன.. இசையை இவர்கள் எப்படி ஹராம் என்று சொல்கிறார்கள், முஸ்லிம்கள் ஏன் பிற்போக்காக ஆகிக்கொண்டிருக்கிறார்கள் , இவர்கள் ஏன் தேசிய நீரோட்டத்தில் கலக்கவில்லை என்றெல்லாம் தொடர்பதிவு போடுகிறார். உங்கள் பதிவெல்லாம் சரி.. ஆனால் இந்த மாதிரியான் பின்னடைவுக்கு, பிற்போக்கு சிந்தனைக்கு என்ன காரணம்.. யார் காரணம் இவர்கள் தானே.. அப்படி இருக்கையில் இவர்கள் மீலாதை எப்படி ஏற்பார்கள் என்று கூடவா இவருக்கு தெரியவில்லை.
    இவர்கள் எதை.. எதை இன்றளவும் விவாதித்து ஒத்துக்கொண்டிருக்கிறார்கள்... 

    அறிவாளிகளாக காட்டிக்கொள்ளும் எல்லோரும் கடைசியில் கலனிப்பானையில் தான் கை வைக்கிறார்கள்.
    13 hrs · Edited · Like · 1
  • J Mohaideen Batcha மார்க்கத்தை எல்லாம் விட்டுவிட்டு ஒரு தனி மனிதருக்கே நபிகள் நாயகத்தின் வழிகாட்டுதல் எவ்வாறு உதவும், அவனை சீர்படுத்தும் என எண்ணினாலே அவனை அறியாமல் நபிகள் நாயகத்தின் மீது ஒரு கனிவும், நன்றியும் வரும்.
    13 hrs · Like · 2
  • J Mohaideen Batcha மார்க்க அறிஞர்கள் எதை தான் கண்டிக்காமல் இருந்தார்கள்.. நீங்கள் யாரை மார்க்க அறிஞர்கள் என எடுக்கிறீர் என்பதை முதலில் தெளிவு படுத்த வேண்டும்... மார்க்க அறிஞர்களிடமிருந்து தான் பெரும்பாலான பிரச்சனைகள் வருகிறது, இன்றைய சமூக பிளவுக்கு காரணமும் மார்க்க அறிஞர்கள் என சொல்லிக்கொள்பவர்கள் தான். மெய்யான மார்க்க அறிஞர்கள் மிக சொற்ப்பமாகிவிட்ட நிலையில் எவராவது தாடியும் தலைப்பாகையும் வைத்துக்கொண்டு குர் ஆனை, ஹதீஸை பேசினால் மார்க்க அறிஞர் என சொல்லும் காலம் இது.
    13 hrs · Like · 1
  • J Mohaideen Batcha நபிகள் நாயகத்தின் பிறந்த் நாளை கொண்டாட விவாதம் புரியும் சமூகம் நபியின் சமூகமா... ஐயோ... நாசம்.
    13 hrs · Like · 1

    • 4 hrs · Like
    • J Mohaideen Batcha எது எதுக்கோ கூட்டம் போடுவான்.. எது எதுக்கோ நாளை பொழுதை செலவிட்டு மொத்த உழைப்பையும் கொட்டுவான்.. ஆனால் உன்னை மனிதனாக்கிய... உனக்கு நல்ல கொள்கை கோட்பாடுகளை வழங்கிய ஒரு மனிதப்புனிதரை நன்றி உணர்வோடு ஒரு கனம் கொண்டாடு என்றால் .. அப்போது தான் பித்அத், கூடும், கூடாது என சட்டம் பேச வருவான்... கேவலம் தன்னை மிக உயர்வாக்கிய எனைய சமூகத்தைவிட சிறப்பாக வாழ வைத்த தன் தலைவரை மறந்த, மறைக்க அல்லது காழ்ப்புணர்வு கொண்ட கேடுகெட்ட சமுதாயம் என்றால் அது இஸ்லாமிய பெயர் தாங்கிய சமுதாயம் தான். சில நேரங்களில் இப்படி பட்ட அறிவுக்குருடர்களின் சமுதாயத்தில் பிறந்ததிற்காக நான் வெட்கப்படுகிறேன்.
      3 hrs · Edited · Like · 1

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

கருத்துகள் இல்லை: