19 ஜூலை 2015

எங்கே..? மாண்பாய் இருந்த நோன்பு


(நோன்பு வைத்ததும்.. துறந்ததும்...
   ********************************************
இரண்டு மூன்று மணிநேரமே உறங்கினாலும்
அலாரம் அடிக்கும் முன்னே
எழுந்திருத்த சஹர் நேரம் எங்கே..?
பிரம்மமுகூர்த்தத்தின்
சுத்தமான ஓசோன் வாடையை
மொத்தமாக சூவிகரிக்கச்செய்த
முழுமாத தவம் எங்கே..?
அதிகாலை இரம்மியத்தை
துதிபாடி பருகச்செய்த
தூயப்பொழுதுகள் எங்கே..?
குறைவாக உறங்கி எழுந்தாலும்
புத்துணர்வு பூரித்திருந்த
இரவுச்சமயலின் இதம் எங்கே
அது தந்த அலாதி ரிதம் எங்கே
கடைசியாய் குடிக்கும் நீர்துளி எங்கே
நிய்யத் தென்னும் நோன்பின் எண்ணம்
கொடுக்கும் நிரந்தர இன்பம் எங்கே..?
இப்தாரின் உதடுகள்
இறைவனைப்புகழ்ந்து
முதலில் தேடும்
முதிர்ந்த பேரித்தங்கனிகள் எங்கே..?
இழந்த பலத்தை இலகுவாக மீட்டுத்தந்த
இனித்த பழங்கள் எங்கே..?
தாகித்த குடல் தணித்த
குளிர் பானங்கள் எங்கே..?
நெஞ்சம் குளிர நாக்கில் பட்ட
நோன்புக்கஞ்சி சுவைச் எங்கே..?
வயிறுக்குகந்த கடல்பாசி எங்கே..?
வாசமான சமூசா பஜ்ஜிகள் எங்கே..?
வறுக்கும் மணம் மயக்கும் மனம்
முந்திரி திராட்சை மிதந்த வர்மிசல்லி எங்கே..?
விரும்பி உண்ட அரீஸ் வகைறாக்கள்
அரேபிய உணவுகள் திரும்பிய திசைதான் எங்கே..?
இத்தனையும் கிடைத்தாலும்
எல்லாவற்றிலும் இன்பம் நல்கும்
அந்த கடைசி நேர காத்திருப்பின்
இஃப்தார் ஆவல் எங்கே..?
பதிநைந்து மணிநேர நோன்பிற்க்கு
பாசத்தின் தாய்கரமாய் ஊட்டவரும்
பாங்கோசை தரும் பரவசம் எங்கே..?
இவையெல்லாம் பெற இன்னும் ஓராண்டு காத்திருப்போம்
இறையருள் நம்மை மீண்டும்.. மீண்டும் மீட்டுத்தரட்டும்.
-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

1 கருத்து:

வேகநரி சொன்னது…

உங்களுக்கு ரமலான் வாழ்த்துக்கள்.