02 செப்டம்பர் 2016

மென்கண்ணமும் என் விரல்களும்


தொழுது கொண்டிருந்த
பாக்கிஸ்தானிய அப்பனின் பக்கத்தில்
அவன் விழுது ஒன்று அமர்ந்திருந்தது.
பசுமிளங்குருத்து
பள்ளிவாசலில் இருந்த போதும்
ஏதோ ஓர் உலகின் புள்ளியில்
மகிழ்ச்சியை அள்ளி.. அள்ளி
அவன் வாசலில் இட்டுத்
துள்ளிக்கொண்டிருந்தது.
மெய்மறந்து கண்டிருந்தச் சனத்தில்
என் இந்திய விரல்கள் தொட்டு
அப்பிக்கொண்டேன்
அவன் அழகிய கண்ணங்களின்
மென்மையை!
-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

1 கருத்து:

Unknown சொன்னது…

i had also admired the honesty of bangladesh maids as servants in our house in dubai
most of them are honest... never takes tea also from their employers...