07 செப்டம்பர் 2016

எந்தச் சணத்திலாவது..!



திடீரென எந்தச் சணத்திலாவது
எதிர்பாராத ஒன்று நடந்துவிடுகிறது
திடீரென எந்தச் சணத்திலாவது
கொடுங்கேள்விகள் அழுத்துகிறது
திடீரென எந்தச் சணத்திலாவது
குலுங்கிக் கதறி அழத்தோன்றுகிறது
திடீரென எந்தச் சணத்திலாவது
உன் நாளை எதுவாகுமென வினாதொடுக்கிறது
திடீரென எந்தச் சணத்திலாவது
ஏதும் இதுகாறும் செய்திட்டாயாவென்கிறது
திடீரென எந்தச் சணத்திலாவது
துணைமனம் தேடி நெஞ்சம் விம்முகிறது
திடீரென எந்தச் சணத்திலாவது
பெரும் காரிருள் சூழ்ந்து போகிறது
திடீரென எந்தச் சணத்திலாவது
மனம்பதைக்க பயமுறுத்திச் செல்கிறது
திடீரென எந்தச் சசணத்திலாவது
அதிர்ச்சிப் பேய் அறைந்துவிடுகிறது
திடீரென எந்தச் சணத்திலாவது
மரணத்தை கண்முன்னே காட்டிச்செல்கிறது
திடீரென எந்தச் சணத்திலாவது
சலனமற்று இருத்தி வைக்கப்படுகிறது
திடீரென எந்தச் சணத்திலாவது
மனம் மிகஒன்றி இதைமட்டும் தாவென வேண்டுகிறது
திடீரென எந்தச் சணத்திலாவது
இவையெல்லாம் மறந்து மனமாற்றம் பிறக்கிறது.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

கருத்துகள் இல்லை: