02 செப்டம்பர் 2016

வாழ ஆசைப்படும் மனிதர்கள்

அவன் "சுப்ஹானல்லாஹ்" சொன்னான்
எதிர்பாரா உதவி என்மூலம் கிடைத்ததும்,
நானும் கண்டேன் அவன் முகத்தில்!
(சுப்ஹானல்லாஹ் - இறைவன் மிகத்தூய்மையானவன், நமது கற்பனைகளுக்கு அப்பாற்பட்டு.)

***
தனிமைகூட துயரமல்ல
தனிமைப்படுத்தப்படுவதல்லாமல்!


***

எல்லோரும் அதிகம் வாழ
ஆசைப்படுகிறார்கள்

துயரமெல்லாம்
இதுவரை வாழ்ந்த வாழ்வில்
அவர்கள் என்றுமே வாழாதது தான்.

மேலும் அவர்கள்
மிகுந்த சிரமப்பட்டு
யோசிப்பதெல்லாமும் கூட
வாழ்க்கையில் வாழ்வதற்கு தான்.

ஆனாலும், வாழ்தல் என்பது தான்
பெரும்பாலும் நிகழ்வதில்லை.

***

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

கருத்துகள் இல்லை: