03 பிப்ரவரி 2017

யாசகன் மனசு

உன் வாசலில் எப்போதும் போல்
நான் யாசகனாக நிற்கிறேன்
தட்டை நிறப்புவது என்றைக்குமே
உன் வள்ளல் தன்மை தான்.

இதுவரை என்னிடம்
தனிப்பட்ட பிரயத்தனங்கள் இல்லை
நீ பாதை காட்டுகிறாய்
என் பயணம் தொடர்கிறது

சில கற்கள் என்னை இடறிவிடும் நிலையில்
சிராய்ப்புகளால் காயப்பட்டிருக்கிறேன்
எவ்விதம் உன் அருமருந்து
வருமென்று அறிகிலேன்
ஆனாலும் நான் சுகமடைந்திருக்கிறேன்.

வாசல்கள் அடைபடும் போது நான்
நொந்துகொள்வதில்லை
தயாளம் தான் உன்னிடம் இருக்கிறதே

உள்ளம் சொல்லியும்
கண்களுக்கு கண்ணீர்
உகுக்க மட்டுமே தெரியும்
அக்கண்ணீரை துடைக்க
உன் அருட்கொடைகள் விரியும் என்பது
எனக்குத்தானே தெரியும்.

ஜா.முஹையத்தீன் பாட்ஷா

கருத்துகள் இல்லை: