24 பிப்ரவரி 2017

புத்தகம் பற்றி..

ஒவ்வொரு புத்தகத்தை படித்து நிறைவு செய்த பின்னரும் எவ்வளவு மன நிறைவு.. மன மகிழ்வு..!
மூடப்பட்டு கிடந்த அந்த புத்தகப் பெட்டகம் திறந்தவுடன் தான் எத்தனை.. எத்தனை.. புதையல்கள்.. எத்தனை.. எத்தனை.. செல்வக்குவியல்கள் இத்தனை நாளும் உன்னை நான் ஏன் நாடாமல் இருந்தேனோ என்று உள்ளுணர்வு புலம்பிடடும். என் அறிவுக்கண்ணை இத்தனை நாளாய் மறைத்த பேரிருளை நீ விளக்கும் விதம் தான் என்ன புத்தகமே நீ தான் என் மொத்த அகமே!
(ஒரு புத்தகம் படித்து விட்டு புத்தகங்களை பற்றி நான் எழுதியது)

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

கருத்துகள் இல்லை: