15 பிப்ரவரி 2017

காதல் கைதி

உன் கைதியாக இருப்பதில் தான்
எனக்கு அலாதி பிரியம்;
வா!
வந்து விலங்கிடு
தனிமை சிறையில் அடை
இடைவிடாது இம்சை செய்
பிறகு,
என்னை கொல்ல
மின்சாரம் செலுத்து
உன்னால் சாவதை நேசிக்கிறேன்
மூர்க்கமாய் கொலை செய்!
நான் அழிவதில் தான் எத்தனை பேரின்பம்.
# மெய்யாலுமே காதலர் தினக்கவிதை, இதை அதிகாலையிலேயே எழுதினேன். ஆனாலும் பதிவிட யோசித்தேன், வந்த தீர்ப்போடு தொடர்பு படுத்தினால் நான் பொறுப்பல்ல.


-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா
14-02-2017

கருத்துகள் இல்லை: