15 பிப்ரவரி 2017

பாசிசத்தின் விளையாடல்

கரையானை ஒழிக்க 
பூதத்தை வரவழைப்பதா?
புற்றீசலை தொலைக்க 
பூமிக்கே தீயிடுவதா?
சாமி வரங்கொடுக்கவில்லை எனில்
சந்தியிலிட்டு உடைப்பதா?
எதிரிப்படை அழிய
துரோகிகளை துணைக்கழைப்பதா?
இருட்டு கிரகத்தில் புகுந்து
இனி நமக்கே விடியலென்பதா?
முரட்டுக்குதிரை மீதேறி
குருட்டு சவாரி செய்வதா?
பாழும் விசமாயிருக்கும் வெண்மையை
பாலென நம்பிச் சாவதா?
நீளும் அறியாமையால் நாளுமே
வீழும் இச்சமுதாயம் என்றுமே.


-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா
14-02-2017

****
இதுவும் அரசியல் சூதே! 
ஒரு சூதின் முதுகில் மற்றொன்று.
14-02-2017

****

நான் அந்த கட்சியை சாரந்தவனோ அல்லது அபிமானியோ அல்ல, ஆனாலும் பெரும்பான்மை பெற்ற அவர்களது கட்சியில் மாநிலத்தின் ஆட்சியை யார் நடத்தினால் நன்றாக இருந்திருக்கும், மோதிக்கொண்ட இருவரில் யார் எனும் கேள்வி உருவாகும் போது பன்னீர் நன்னீரல்ல.. சசி மீது நிறைய பொய்யான பிம்பம்ஙக்ள் கட்டமைக்கப்பட்டதும் சங்பரிவாரத்தின் கூலியாக பன்னீர் விலைபோனதும் உண்மை, சசியை அவரது எதார்த்தமான அவரால் மறைக்கமுடியாத அல்லது மறைக்கத்தெரியாத உடல்மொழி வெளிப்படுத்திக்
காட்டிவிடுகிறது ஆனால் பன்னீர் பதுங்கும் கழுகு, ஊமைக்குசும்பன்.
உண்மையில் சசி நல்லவரா கெட்டவரா என்பதை தாண்டி பாஜாகாவின் சித்துவிளையாட்டில் தமிழகமக்கள் வலிந்தே மாட்டிக்கொள்வதையும், பன்னீரை தியாகியாக சித்தரிப்பதையும், காமராஜராக வர்ணிப்பதையும் ஏற்கமுடியவில்லை அவர் இத்தனை நாள் படமெடுக்காத பாம்பாகத்தான் ஜெ.முன் உலவியிருக்கிறார். தவிர வழங்கப்பட்ட தீர்ப்பு சசிக்கு எதிரானது என்றால் கட்சியில் பன்னீர் உட்பட பதவியில் இருந்து மிக தூயவாழ்வு நடத்தியவர்கள் இல்லை அவர்களின் நமட்டு சிரிப்பிற்கு பின் மனசாட்சியின் கேள்வி இல்லாமல் இருக்காது, உள்ளே பயமும் இருக்கத்தான் செய்யும். தவிர கொல்லைப்புறமாக திராவிட சிந்தனையை, பெரியாரியத்தை ஒழிக்க துடிக்கும் பஜாக, சங்பரிவாரங்களின் இப்போதைய மதவாத வெற்றியை ஒருவேளை சசிக்கு தீர்ப்பின் பின்னடைவு வராமல் இருந்திருந்தால் வேரறுத்திருப்பார் என்றே நம்புகிறேன். ஆனால் நடந்தது எல்லாம் பாசிசத்தின் துரோகத்தின் பற்களால் குதறப்பட்டவை.

!5-02-2017

கருத்துகள் இல்லை: