14 ஆகஸ்ட் 2010

தரையினில் தவழும் நிலவோ


சுல்தான் அஹமது நளீர்

தரையினில் தவழும் நிலவோ  நீ
மடியினில் மின்னும் கதிரோ
தமிழினில் சேர்ந்த சுவையோ- நீ
கவியினில் மிளிரும் அழகோ

இல்லம் வந்த இசையோ  நீ
இதயம் ஈர்க்கும் விசையோ
இலக்கணம் பாடும் அசையோ  நீ
இலக்கியம் தேடும் ஓசையோ

இதந்தரும் இயற்கையின் சிரிப்போ  நீ
நிதம்வரும் நினைவினின் களிப்போ
விடியற் காலையின் கிழக்கோ  நீ
விடியல் நல்கிடும் இலக்கோ

மழைக்கால வானத்து வில்லோ  நீ
மனங்கவர் மணிவைரக் கல்லோ
தெய்வீக நாதக் குழலோ  நீ
தெவிட்டாத தெனின்பக் குறளோ

ஆசையில் தேடிய முத்தோ  நீ
அன்பினில் விளைந்த வித்தோ
ஆண்டவன் அளித்த பரிசோ  நீ
ஆதவன் போல் வந்த முரசோ

நதியினில் ஆடிடும் வளமோ  நீ
நகர்ந்திடும் ஆனந்தக் குடமோ
நாயகன் அளித்திட்ட அருளோ  நீ
நபிநாயகம் உவந்திடும் நிறைவோ

முகம்பார்த்து சிரிக்கும் பூவே  நீ
சகம் போற்ற சிறந்து வாழ்க!
புகழோங்க வாழ்வு வாழ்க!!  நாங்கள்
பூரித்து மனம்மகிழ வாழ்க!!!

வாழ்த்துடன் ஜே.எம்.பாட்ஷா (30-10-2009)


4 கருத்துகள்:

Kavianban KALAM, Adirampattinam சொன்னது…

"நதியிலாடும் நிலவோ” என்பது சரியாக இருக்கும்
புதுக் கவிதையில் புகுந்து விளையாடும் உங்கள் கற்பனைகள் என்னும் மலர்கள் மரபு என்னும் நாரில் தொடுத்தால் இன்னும் மணம் வீசும்

Thanjai Vasan ‎ சொன்னது…

// தரையினில் தவழும் நிலவோ //

எனது இதயத்தின் அறைகளிலும் பாய்ந்து கொண்டு...

குழந்தையின் படமும், குழந்தைக்காண வரிகளும் அருமை..

// முகம்பார்த்து சிரிக்கும் பூவே – நீ

சகம் போற்ற சிறந்து வாழ்க!

புகழோங்க வாழ்வு வாழ்க!! – நாங்கள்

பூரித்து மனம்மகிழ வாழ்க!!!//

உங்களுடன் வாழ்த்துவதில் எனக்கும் மகிழ்ச்சி..

Abu Aasima சொன்னது…

super, naan en makalukkake enru ninaiththukkonden.........​...

Abdul Kader Sinras சொன்னது…

super machan