08 அக்டோபர் 2014

சில கவிதைகள் - முகநூல் செப்- அக்-2014



சில கவிதைகள்
உடனே அரங்கேறிவிடுகின்றன..
சில கவிதைகள்
கிடத்தி வைக்கப்படுகிறது
கோர்க்கப்படாத மணிகளை போல!
மக்களின் மனநிலையை
குப்புற கிடத்தியது சட்டம்!
***
சட்டத்திற்கெதிரான
ஆர்ப்பாட்டங்கள்
அடைந்ததுவே நட்டம்!
***
அதிகார அத்துமீறலுக்கு
சட்டம் சிறை என்றது,
பிணையில் வரலாம் என்ற
முயற்சியையும் கூட
அது முறித்துப்போட்டது!
***
சட்டத்திற்கு அப்பாற்பட்ட
அரசியல் அபிமானங்கள்
நீதிமன்ற வாசலுக்கு
வெளியேயே கதறலாய்.. கூக்குரலாய்..!

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
விவாதங்கள் வேண்டாம்! வேண்டவே வேண்டாம்!! .. 
அது மோனநிலைக்கு எதிரான 
இடையூறாக நின்று நிசப்தம் கொல்கிறது. 
sep'28 - 2014

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^


ஓ.. ஞானப்பித்தா..!
தமிழ் மண்ணின் புத்தா..!

வேங்கையின் வெறி கொண்டு
வேள்விகளின் வெந்தழலினில் 
ஒன்றுமற்று கரைந்தவனே!

பாரதி!

இன்று உனக்கு
நினைவு நாளாம்!

ஆம் - நீ
என்று மறைந்தாய்?!!!!


12 SEPTEMBER 
20:40

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
10 SEPTEMBER 
22:51

அழகின் வர்ணணைகள் 
வார்த்தைகளாக மட்டுமே உலவுகின்றது

அழகின் தோற்றங்களெல்லாம் 
எண்ணப்பிழையாய் உதிர்கின்றது

அழகின் மாயங்களெல்லாம் 
அறிவைத்திரையிடும் அழிவுச்சுழியாகிப்போனது

அழகென்பதெல்லாம் அழகன்று,
அழகென்பது தவறாய்... பிழையாய்...
பேசப்படுகிறது.. பார்க்கப்படுகிறது..
எண்ணப்படுகிறது... எழுதப்படுகிறது..
அறியப்படுகிறது.. புரியப்படுகிறது...,

சத்தியமாய்
அறுதியிட்டுச் சொல்வேன் அவைகளெல்லாம்
அழகில்லை..
சத்தியத்தை தவிர!

அழகோ..
அணுவுக்கணுவிலும்
மெய்மையால் சிரிக்கிறது.

சிரிக்கும் அவ்வளகு
நித்தியமானது
நித்தியத்திற்கு அழிவில்லை
அவ்வழகு அவ்வளவு நிரந்தமானது!

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^


தூர இருக்கும் போது ஏக்கமும்
அடைந்துவிட்ட போது ஏற்படும் சலிப்பும்
வாழ்வின் எதார்த்தங்கள்! 

05 SEPTEMBER 18:32
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
பிறகென்ன!
*****************
நினைக்கலாம் நாம் எதையும்!
நடக்கட்டும் இங்கு எதுவும்!!
அனைத்துமே அதன் அசைவே!!!

1 SEPTEMBER  22:28

இயற்கை மனிதா... விலகிப்போனதேன் வெகு தூரம்!
மீள்வாயா...? மீட்டிடத்தான் முடியுமோ இனி உன்னை ! ?
1 SEPTEMBER

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

கருத்துகள் இல்லை: