01 அக்டோபர் 2014

எம்.ஜே.பி- பழகும் முகில் !

எம்.ஜே. பசீர் அஹமது அவர்களோடு பெயரர் நதீம் 
இந்த காலத்திலும் இப்படி சாத்தியமா
என்பது போல உலகம் தெரியாதவர்!

வெள்ளந்தியான மனிதர்!
வெள்ளை மனதுக்காரர்!

உறவுகளில் உள்ளம் இழந்து
உயிரின் அடிநாதத்தில் நேசிப்பார்!

குடும்பம்.. பண்பாடு..மரபு இவற்றின் 
வேர் 
என்றும் உயிர்த்திருக்க பேராசைப்படுவார்!

அமைதியை ஆராதிக்கும் அழகர்!
அன்புக்கென்று உருகும் திலகர்!

சமூகநலனுக்காய் எப்போதும் சிந்திப்பவர்!
சமூகம் சிறக்கவே இப்போதும் சம்பாதிப்பவர்!

பெரியவர்களை.. அறிஞர்களை சிறப்பிப்பதில் முதல்வர்!
இலக்கியத்தை.. கவிதைகளை ரசிக்கும் தமிழ் புதல்வர்!

கவிதைகளை ரசிக்கும் கவிதையிவர்!
கவிஞர்களை உவக்கும் கவிஞரிவர்!

சொந்த கிராமத்தின் புகழ் கூவும் குயில்!
பந்தபாசத்தோடு எல்லோரிடத்திலும் பழகும் முகில்!

முகநூலில் கூட பிறந்த நாள் குறிப்பில்லை
முகம்தெரிந்த நண்பர்கள் சொல்லித்தான் நானே அறிந்தேன்.

சிறிய தந்தையாரே,
குடும்பம் குலம் சிறக்கப்பெற்று
வானளவு நிறைநலம் பெற்று
வாழ்க நீங்கள் பல்லாண்டு!
-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

கருத்துகள் இல்லை: