16 ஆகஸ்ட் 2016

சங்கைநபி இசைக்கோர்வைக்கு எழுத்தாளர் அபூஹாசிமா வாழ்த்து

மனசெல்லாம் நபிக்காதல் கொண்டவரும், ஓப்பற்ற கவிஞரும் சிறந்த எழுத்தாளரும், நமது முற்றம் மாத இதழ் ஆசிரியரும்,சமூக செயற்பாட்டாளருமான அருமை அண்ணன் Abu Haashimaஅவர்கள் எனது ஆக்கத்தில், பாடகர் அபுல்பரக்காத்தின் குரலில் தயாரான "சங்கை நபி" இசைக்கொர்வை குறித்து எழுதி மனம் நெகிழச்செய்திருக்கிறார்கள். அன்னாருக்கு எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகள் உரித்தாகுக!

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா
********

அன்புத் தம்பி முகைதீன் பாட்சா...
தமிழ் ஆர்வலர்.
ஆன்மீக நேயர்.
ஞானத்தின் காதலர்.
அவர் ...
சில அற்புதமான இஸ்லாமிய பாடல்களை இயற்றி
பாடகர் அபுல்பரக்காத்தின் இனிய குரலில்
இசை வடிவாக கொண்டு வந்திருக்கிறார்.
பாடல்களில்
ஞானமும்
முஹம்மது நபிகளார் மீதான
காதலும் கசிந்து உருகி
கேட்கும் நம் நெஞ்சை நிறைக்கின்றன.
மொத்தம் ஆறு பாடல்கள்.
ஆறையும் கேட்டு விட்டேன்.
ஆற அமரத்தான் கேட்கவில்லை.
கொஞ்சம் ஓய்வில்லாத சூழ்நிலை.
தம்பியின் கருத்தாழமிக்க வரிகளை
கொஞ்சம் கவனமாக கேட்டு ரசித்து உள் வாங்க வேண்டும்.
பாடல்கள் இனிமையாக இருக்கின்றன.
மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகின்றன.
இன்ஷா அல்லாஹ்
மீண்டும் ஓரிரு முறை கேட்டு மகிழ்ந்து
தம்பி முகைதீன் பாஷாவின் ஞான வரிகளின்
ஆளுமை குறித்து ...
இன்னும் சொல்வேன்.
வாழ்த்துக்கள்
பாஷா பாய்.


கருத்துகள் இல்லை: