18 பிப்ரவரி 2015

தூங்கக்கூடாத இரவு


அறிவைப் பெறுவதில் தூங்காது விழிப்பாயிரு..!
ஆண்டவனை அடைவதில் தூங்காது விழிப்பாயிரு!!
முக்திநிலை பெறுவதில் தூங்காது விழிப்பாயிரு!!!

இரவென்பது இருள் போர்த்தியது!
இருளென்றால் ஒளியில்லாத நிலை!
ஒளியில்லாத நிலையினில் தெளிவிருக்காது!

தெளிவென்பது வேண்டுமெனில் ஆங்கே
அறிவொளி ஏற்ற இருள் தானே விலகும்
ஒளியிருந்தால் எதற்குமே வழியறியலாம்!

ஆனதினால் தானே முன்னவர்
இரெவெல்லாம் விழிக்கப்பணித்தனர்
சிவராத்திரியென்று!

எல்லாமே ஆன்மீக பயிற்சி தான்.
எல்லாமே சொல்லாமல் சொல்வது தான்.

ஈங்கே இரவெல்லாம் என்பதில்
பகலும் அடங்கும்!
உள்ளத்தின் இருள் விலகிவிட்டால்
இரவினிலும் பகல் நிலைக்கும்.

(நேற்றைய சிவராத்திரிக்காக முகநூலில் பதிந்தது)

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
எல்லா 
"வேறு"களுக்கும் 
"வேரு" ஒன்று தான்.
வேறு வேரென ஏது 
எல்லாம் ஒன்றினில் என்றான பின்


-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

கருத்துகள் இல்லை: