06 பிப்ரவரி 2015

பொழுதுகளில் சில!


சிலபொழுதுகள் நம்மை அறியாமலே
இன்பம் சூழ்ந்துகொள்கிறது
அந்தப் பொழுதுகளில் அடுத்தடுத்த
இன்பங்களால் நாம் திக்குமுக்காடுகிறோம்
எல்லோரிடமும் இன்முகம் காட்டுகிறோம்
எல்லோரிடமும் இன்சொல் கூட்டுகிறோம்
உடலெல்லாம் எல்லா அணுக்களிலும்
கொண்டாட்டங்கள் நிறைந்து காணப்படுவதை
ஏதோ ஒரு சிலிர்ப்பு நமக்கு உணத்தாமல் இல்லை
பூரிப்பின் பூபாலத்தால் முகமெல்லாம்
ஜொலி ஜொலிப்பதை குழந்தையைப்போல
மகிழும் நாம் கண்டுணரலாம்
அப்பொழுது பல பட்டாம்பூச்சிகள்
முகத்திலும், முதுகிலும், தோல்பட்டைகளிலும்
ஏன் கழுத்தினில் கூட இடைவெளியின்றி வந்தமர்ந்து
மென்பட்டால் மெய்மறக்கச் செய்கிறது
மனதினில் ஒரு நறுமண பூ மலர்கிறது
குளிர்கால அந்திப்பொழுதின் மென்காற்று வீசுகிறது.
அதைப்போலத்தான் நம்மை அறியாமலே
துன்பமும் சூழ்ந்து "கொல்"கிறது சில பொழுதுகளில்.
அந்த கணங்கள் பல ரணங்களை
கண்ணாடியாக காட்டி
இன்னும் இன்னும் நம்மை துயருறச் செய்கிறது
யாரிடமும் பேசத்தோணாத அந்தச்சூழலில்
யாரிடமிருந்தாவது ஓர் அழைப்பு வந்தால்
கொடூரத்தை தவிர நம்மால் எதையும் தரமுடிவதில்லை
நம் முகத்தையே கூட கண்ணாடியில்
பார்ப்பதற்கு பிடிப்பதில்லை
அந்த சனத்தில்
ஓர் கவிதை புத்தகம்
பார்த்து சிரித்திடும் மழலை
சில்லென்ற புல்வெளியில் ஒரு நடை
கடற்கரையில் அலை விளையாட்டு
பொத்தென்று தண்ணீல் தலையில் விழும் அருவிக்குளியல்
பவுர்ணமியோடு நட்சத்திரங்கள் நிறைந்திருக்கும் வானம்
இவற்றில் ஏதாவதொன்று தேவை - நம்மை
பனிக்கட்டியாய் உருகவைக்க!
மீண்டும் நம்மை மீட்டெடுக்க!!
-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

கருத்துகள் இல்லை: