20 பிப்ரவரி 2015

வேண்டிய மட்டும் இழந்து...!


எல்லைகளற்ற வானம் நமக்கு பிரமிப்பை ஏற்படுத்திய 
கணத்தை நினைத்துப்பார்!
ஏதுமற்ற ஒன்றினை எண்ணத்தால் நிர்ணயிக்க 
எடுத்துக்கொண்ட எல்லா முயற்சிகளும் தோல்வியை கண்டனவே..!
அந்த பரந்து விரிந்த தாத்பரியத்தின் விசாலத்தில் 
வா!.. நாமும் கலக்கலாம் என்றேன்,
ஆனால் நீயோ கூடாரத்தின் கூரை அளவு போதுமென்கிறாய்
நான் வெட்டவெளிக்கு சொந்தக்காரன் என்னை விட்டுவிடு!



பேராழி நமக்கு ஏற்கனவே காட்டப்பட்டிருக்கிறது
பேராழி குறித்து நாம் நிறைய விவாதித்திருக்கிறோம்
ஆனாலும் ஏதோ ஒரு பயத்தால் நீங்கள்
அந்த குளத்திற்கு போவதையே விரும்புகிறீர்கள்.
என்ன செய்ய! உங்களோடு நான் வரப்போவதில்லை,
பேராழியில் வேண்டிய மட்டும் இழந்து லயிப்பேன்!

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

கருத்துகள் இல்லை: