02 செப்டம்பர் 2015

காலக்குதிரையின் முதுகில் !



ஒன்று போக
பிரிதொன்று..
இதை முடித்தால்
மற்றொன்று
அது கழிந்தால்
வேறொன்று! 

அங்கே போ..
அடைந்துவிட்டால் பின்
இங்கே செல்!
ஆதுவும் எய்தினால் மீண்டும் ஓடு
வேரெங்கவது
ஓடு… ஓடு.. ஓடு…!

அயர்ச்சியின் மிகுதியில்சோர்வா..
இருந்தாலும் ஓய்வெல்லாம் கூடாது
ஓடு.. ஓடிக்கொண்டேயிரு..!

பிறகு..
எங்கோ சில புள்ளிகளில்
கொஞ்சம் பெருமூச்சு வாங்கும்;
அங்கும் சிறு ஆசுவாசம்
மட்டும் தான் அனுமதி..!

பின்பும் தொடரும்
ஓடு… ஓடு… ஓடென்ற குரல்
முன்பு போலவே..!

ஒன்று போக
பிரிதொன்று
இதை முடித்தால் மற்றொன்று
அது கழிந்தால்
வேறொன்றென...?

எதையுமே சட்டைசெய்யாது
அதிவேகமாய்
நீண்டு நகர்ந்திடும்
காலக்குதிரையின்
முதுகில் நாம்!

குதிரையே ஓரு நாள்
நம்மை இடறி சாய்த்துவிட்டு
ஓட்டம் தொடரும்.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

1 கருத்து:

Unknown சொன்னது…

அருமை.....