04 செப்டம்பர் 2015

சில பேருக்கு சில...!



சில பேருக்குச் சில..!
*****************************

சில பிஞ்சு மாணவர்களுக்கு..
பள்ளி செல்வதை நினைத்தாலே... -அந்த
ஆசிரியரின் கோபமும் கொடுமையும் 
மனசெல்லாம் ஒருவித அச்சமாய் பரவி உருக்கும்;
படியேறும் போதே பதற்றம் சூழும்
பாடத்தைத் விட பயமே பற்றிக் குலைக்கும்!

*
சில அலுவலர்களுக்கோ...
தங்கள் அலுவலகம் பற்றி நினைத்தாலே
வேலைச்சுமையும் மேலாளரும் தான் கண்முன்,
இரவெல்லாம் தூக்கம் வராது
நெஞ்செல்லாம் நெய்யூற்றியது போல் எரியும்
என்ன சொல்வாரோ.. ஏது நடக்குமோவென்றே 
மீண்டும் வேலையில் மட்டும் மனம் லயிக்காது!

*

அதுபோலவே..

சில கணவன்மார்களுக்கும்
எல்லா வேலைக்குப்பின் இன்றும்
வீடுக்கு திரும்பிப்போய்த்தான் ஆகவேண்டும்
வீட்டிலிருக்கும் பேயோடு போராடியேத் தீரவேண்டும்
என்பதை எண்ணினாலே ஜன்னிகண்டுவிடுகிறது
விரக்தியின் வீதிகளில் சோர்ந்து சரிந்து
ஆற்றாமைக்கு ஏதுமிலாது விதிசெய்த சதியை நொந்து
நிர்பந்தத்தின் அழுத்தத்தால் 
தன் வீட்டிலேயே தான் நுழைவான் மனமில்லாது! 

*

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா


கருத்துகள் இல்லை: