10 செப்டம்பர் 2015

பழங்களைப் பெற்றுச்சொல்லுங்கள்.

பக்கத்திலிருந்து பார்க்கிறார்கள்
அதனால் அவர்கள்
நன்றாகவே அறிவார்கள்
எங்கள் தோட்டத்தில்
விதைத்ததும்.. 
முளைத்ததும்..
வளர்வதும்...
கனிமரங்கள் தானென!
ஆனாலும் வெளியே சென்று
வினோதக் கூச்சலிடுகிறார்கள்
அவன் விசச்செடியை
விவசாயம் செய்கிறான் என்று.
பிரச்சனை இல்லை
வாருங்கள் அறுவடைக்காலத்தில்
கூடை நிறைய
பழங்களை தருகிறோம்
பெற்றுச்சொல்லுங்கள்.
-முஹையத்தீன் பாட்ஷா
காலை 10.38
-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

கருத்துகள் இல்லை: