08 செப்டம்பர் 2015

அவசரம் ஏன்..?

ஏன் அந்தக் கவிதையை 
அத்தனை அவசர அவசரமாய் படிக்கிறாய்?
*
பரபரப்புடன் அந்தக்கவிதையை
அப்படிப் படிக்க என்ன தான் அவசியம்?
*
ரசிக்க மறந்து அவசர அவசரமாய்
பசிக்கு திணிக்கும் உணவைப்போல
அந்தக் கவிதையை படிப்பதில்
உன் உணர்வில் உன் சுயத்தில்
என்ன தான் நிகழ்ந்துவிடப்போகிறது?
*
இங்கனம் அந்தக் கவிதை புத்தகத்தை
இனியும் கேவலப்படுத்தாதே
*
மரியாதையாய் வைத்துவிடு
இல்லையேல் உடன் அதை தீயிலிடு.


-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா