03 ஏப்ரல் 2016

வலிந்து அழைத்தல்!



வில்முனையில் பூ தொடுத்து
விருப்பமுடன் எய்யும் வேளை

சொல்முனையின் கூரெடுத்து
சுடச்சுட எறிந்துவிட்டாய்
கள்முனை கனைமுறிய
களைந்ததென் கடுந்தவமும்
பல்முனைத் தாக்குதலை
பறிதவித்தே கேட்டு நின்றேன்
வல்முனை வாத ஈட்டி
வலிந்து எனை அழைத்ததுவே
ஓர் ருத்ர தாண்டவமாட!


முகநூல் பக்கத்தில்....

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

கருத்துகள் இல்லை: