09 செப்டம்பர் 2011

வரவேற்க விமான நிலையத்தில்..!



பிரிய நேர்ந்தால் துக்கம் உச்சியில்..!
சேரும் போதோ மகிழ்வின் துள்ளல்..!

விமான நிலையத்திலும்..,
புகைவண்டி நிலையத்திலும்..,
பிரியும் அல்லது சேரும் ஜோடிகள்
கட்டுக்கடங்காத
உணர்வின் வேகத்தால்
சூழ்நிலை மறந்து
கட்டிப்பிடித்து அழுவதும்..,
முத்தமழை பொழிவதும்
இயல்புக்காட்சிகள்.

சில தருணத்தில் அவை
முகம் சுழிக்க வைக்கலாம்,
ஆனால்… அது
காதலின் ஆழம்..!
காதலின் ஏக்கம்..!
காதலின் தாக்கம்..!
காதலின் வேகம்..!
காதலின் வெறி..!
பொத்திவைக்க பார்த்தாலும்...
காதல் எல்லை அணையுடைத்து
பொங்கிவழியும் நேரமது
என்று உணர்கிறேன்..!

அந்த உணர்வுகள் கொப்பளிக்கவே
இப்போது நான்,
உன்னை வரவேற்க
விமான நிலையத்தில்..!

-ஜே.எம்.பாட்ஷா

3 கருத்துகள்:

அம்பாளடியாள் சொன்னது…

அருமையான காதல்க் கவிதை .காதலர்களின்
மன உணர்வை மிக அழகாகப் படம்பிடித்துக் காட்டியுள்ளீர்கள் உங்கள் கவிதைவரிகளில்.
வாழ்த்துக்கள் .முடிந்தால் என் கவிதைகளையும் பார்வையிடுங்கள் .இது ஒரு அன்பான
வேண்டுகோள் .மிக்க நன்றி உங்கள் பகிர்வுக்கு .

ஜா.முஹையத்தீன் பாட்ஷா சொன்னது…

அம்பாளடியாள் அவர்களுக்கு நன்றி, உங்கள் பாரட்டுக்கள் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.. தங்களின் தளம் மிகவும் அருமை நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்

Unknown சொன்னது…

உங்கள் பதிவை மேலும் பிரபலப் படுத்த / அதிக வாசகர்களைப் பெற உங்கள் பதிவுகளை தமிழ்10 தளத்தில் இணையுங்கள் . ஓட்டளிப்பில் புதிய மாற்றம் செய்யப்பட்டு இருப்பதால் இப்போது தரமான பதிவுகள் அனைத்தும் முன்பை விட விரைவிலேயே பிரபலமான பக்கங்களுக்கு வந்து விடும் .தளத்தை இணைக்க இங்கே செல்லவும்

http://www.tamil10.com/


நன்றி