20 செப்டம்பர் 2011

நீர்க்குமிழி



உடல் நலம் சீராக இருந்தால் தான்,
சீராக எல்லாம் மனித வாழ்வில்!

மனிதன் வாழும் இச்சிறு வாழ்வினில்,
நல்லது.. கெட்டது..
ஆகுவது..ஆகாதது..
சிரிப்பு.. அழுகை,,
பாசம்.. அன்பு..
உறவு.. நட்பு..
வேலை.. ஊதியம்..
குடும்பம்.. விலைவாசி..
சொத்து.. வங்கிச் சேமிப்பு..
உடல்..வனப்பு..செழிப்பு..
அரசியல்.. கட்சி.. ஆட்சி..
மதம்.. கொள்கை.. ஞானம்.. தெய்வம்..
இவைகளெல்லாம்
இரத்த ஓட்டத்தினை அடியொற்றியே!

எதிர்பாரா சூழலில்
இரத்தம் வெளியாகி..
செல்லவேண்டியது,
செல்லாது தடைபடுகையில்..
உடல் வலிமை குன்றநேர்கையில்
இரத்த அழுத்தம் குறைய..
உடலியல் கூறுகளெல்லாம் தடுமாற..
உலகமே சுற்ற..
கண்கள் இருள..
நினைவுகள் சூன்யமாக..
எதைப்பற்றியும் நினைவுக்கு வராத அந்நிலையில்,
எங்கே நான்..?

சிறு நீர்க்குமிழியைப் போலே தான்
நம் உடலும்.. இவ்வுலகியல் பிறவியும்!
நீர்க்குமிழிக்கு நம் பார்வையில் சிறுவாழ்வு
இயற்கையின் பார்வையில் மனிதனும் நீர்க்குமிழி!

-ஜே.எம்.பாட்ஷா

என் காலில் அடிபட்டு இரத்தம் கொட்டி.. மயங்கி.. மருத்துவரிடம் சென்று சிகிச்சைக்குப்பின்
29-08-2008 இரவு 11.35

கருத்துகள் இல்லை: