24 செப்டம்பர் 2011

மச்சானே வா!



நினைவெல்லாம் இருப்பவனே -என்

நித்திரையைக் கெடுப்பவனே

கலங்கரை விளக்கமே நீதான்,

கரைசேர்வது எப்படி.. நீ இல்லாமல்!


தென்றல் என்னில்

தேயும் போது - உன்

தேனிதழ் வடித்த

வார்த்தைகளே யாபகம்!


நேற்றைய கனவினில்

முத்தம் உமிழ்ந்த போது

உரசிய தாடியிடமே

மூர்ச்சையாக்கிவிட்டேன்

என் இதயத்தை!


பூக்கள் சிரிக்கும் போதெல்லாம் - என்

புன்னகை மன்னன்

தேனுண்ண வரும் நாள்

எப்பொதென்ற கேள்வியே!


நிலா தேய்கிறது

நீ இல்லாமல் - என்

நெஞ்சமும் கரைகிறது

மஞ்சம் உனக்கு வேண்டாமா?

மச்சானே வா!


நெஞ்சத்தைப் பறித்துக் கொண்டாய்

நெடுநாளாய் வாடுகிறது.

தஞ்சம் கொடுக்க மனம் இல்லையோ

பஞ்சமேன் உன் அன்பதனில்!


துரத்தித்துரத்தி அடித்தாய் - நான்

துள்ளிக்குதித்த நாட்களில்,

தூங்குவதெப்படி இனி..

இரு விழிகளில்லாமல்!


வானுயர மரம் வளர்த்தாலும்

உன் தென்றல் வராததால்

வாதத்திற்கும் ஆடாத.. அசையாத..

மரமாய் நான்!


பட்டுமேனிக்கு சொந்தக்காரன்

பாட்டுடைத் தலைவன் - என்

வீட்டிற்கு வரும் நாள் எப்போது?


பருவப்பால் திரிந்து விடும்

பருக விரைந்து வா..

பந்தல் போடும் மச்சானே!


ஜே.எம்.பாட்ஷா

காலம்; 1997
-இன்னும் புரியும்

2 கருத்துகள்:

SUMAZLA/சுமஜ்லா சொன்னது…

காதலில் கரைகண்டு அக்கறையால் அக்கரையில் ஆசுவாசப்படும் எழுத்து

ஜா.முஹையத்தீன் பாட்ஷா சொன்னது…

கருத்துரைக்கு மகிழ்ச்சி