30 ஜூலை 2014

எடுப்பார் கைப்பிள்ளைகள் திருந்தட்டும்

முகநூலில் வெளியாகி எங்கும் பரவிவரும் ஒரு புகைப்படம் என்னை வேதனைக்குள்ளாக்கியது.. இது குறித்து நீங்கள் பலரும் அறிந்திருப்பீர்கள்..அந்த புகைப்படத்தில் நிற்கும் இளைஞர்களுக்கும், அதை ஆதரிக்கும் ஒரு சில ஆட்களுக்கும் சிலவார்த்தைகள்....

மூடர் கூட்டம் ஒன்றை வைத்துக்கொண்டால் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்ற சிந்தனை அபாயகரமானது.. மூதேவிகள் சிலரால் இந்த சமூகத்திற்கு கிடைத்த அவப்பெயர் இன்னும் நீங்கவில்லை... சமூக அரங்கில் பின்னுக்கு இருக்கும் சமூகத்தை முன்னேற்ற ஒழுங்கான வேலையை பார்க்காமல் இன்னும் எத்தனை பேரடா புறப்படுவீர்கள்.. ஏற்கனவே கணக்கற்ற பிரிவுகளாய் காரி உமிழும் வகையில் சிதைந்து சின்னா பிண்ணப்பட்டு நிற்கிறது இந்த சமூகம்.

நல்ல சிந்தனையை வளர்த்துக்கொள்ளுங்கள்.. நல்ல நீதமான தலைவர்களை பின்பற்றுங்கள்.. எவனவெனோ உணர்ச்சி வசப்பட்டு பேசினால் அவனுக்கெல்லாம் அல்லாஹ் அக்பர் எனச்சொல்லிக் கொண்டு பின்னால் ஓடாதீர்கள். சுயசிந்தனை இல்லாவிட்டால் இன்னும் கடைநிலைக்கு போய் அசிங்கப்படுவீர்கள், ஏற்கனவே முகநூல போன்ற சமூக ஊடகங்களில் எப்படி மெளடீகமாகவும், மதவெறியை தூண்டுவதாகவும் சில மாற்று மத அமைப்புக்கள் நாசகார சிந்தனையை தூண்டுகிறதோ அதே வகையில் நீங்களும் சமூகத்தின் வளர்ச்சிக்கும், அமைதிக்கும் வகையில்லாத தேவையில்லாத விசயங்களை பறிமாறி ஏன் உங்களையும், உங்களை சார்ந்தோரையும் படுகுழிக்குள் தள்ளிக்கொல்லுகிறீர்கள்...

உங்களைவிட உணர்ச்சி வசப்பட்ட எத்தனையோ நபர்களின் வாழ்வு இன்றுவரை விடைகிடைக்காமல் உள்ளது, சிறைக்கூடம் நிரந்தர வாழ்வுக்கூடாரமாகி அவர்களது தாயும், தகப்பரும், மனைவி மற்றும் பிள்ளைகளும் நிற்கதியாகி நிற்பதை நீங்கள் அறிவீர்களா.. அவர்களின் ஆராத்துயர் நீங்க இன்னும் வழி பிறக்கவில்லை

உங்களை உசுப்பேற்றிவிடும் நபர்கள் உங்களை ஓட விட்டுவிட்டு பின்னால் ஒளிந்து கொள்வர்.. நீ பிடிபட்டால்.. நீ சிறைபட்டால்.. ஒரு பயல் உன்னை சீண்ட மாட்டான்.. பிறகு அழுதென்ன லாபம் உனக்கு வேண்டுமானால் இது தியாகமாக தோன்றலாம்.. ஆனால் முன்பின் யோசனையில்லாத மகா அறிவிழித்தனம் என சமூகமே உன்னை தூற்றும் ஆனால் உன் சகஅறிவிழி அதற்கு மார்க்கப்பாதை என பெயரிட்டால் அது உனக்கு போதையூட்டலாம்... அது நிதர்சனமல்ல.





எவனுடைய இயக்கத்துடையவோ எழுத்தை நீ பனியனாக வாங்கி அணிந்து போஸ் கொடுக்கிறாயே.. அது என்ன..? அதன் பின்னணி யாது..? அவர்களின் உருவாக்கம் எப்படி..? அவர்களின் கொள்கை ஏற்புடையதா..? இது போன்ற கூட்டத்தினால் என்ன பயனுண்டாகும்.. பழங்கால வரலாறு எப்படி என எதையாவது மக ஆழமாக சிந்தித்தது உண்டா.. அது இந்த பூமிக்கு எந்த வகையிலும் தொடர்புடையதா... ??????????????

பெரும்பாலனவர்கள் உன் புறவாழ்வை பார்த்துத் தான் உன்னையும் உன் சமூகத்தையும் எடை போடுகின்றனர் அவர்கள் உட்கார்ந்து உன் விலாசம் என்ன உன் சமயம் சொல்லு அறக்கருத்துக்கள் எது எனவெல்லாம் பார்க்க மாட்டார்கள் அதனால் திருந்து எல்லோருக்கும் கெட்டப்பெயர் வாங்கிக்கொடுக்காதே. நீங்கள் ஏதோ ஒரு தெருவில் ஒரு சிலர் செய்யும் சில தகாதவைகள் ஒரு தேசத்து ஒட்டுமொத்த சமூகத்தின் பெயருக்கே கலங்கம் ஏற்படுத்தும் அளவில் இருக்கிறது.இதையெல்லாம் சிந்தித்து திருந்தி நடந்தால் நன்மை பிறக்கும், இல்லையேல் ஒன்றும் சொல்வவதற்கு இல்லை!

பெரியோர்களை மதித்து... உணர்ச்சி வசத்திற்கு அப்பாற்பட்டு.. பொறுமையோடு எதையும் ஆராய்ந்து நிதானமாக முடிவெடுத்து எல்லோரையும் அன்பு செய்து அரவணைத்து யாரையும் பிரித்து பார்க்காது வாழப்பழகினால் உன் வாழ்வும் மகிழ்ச்சியாய் இருக்கும், எல்லோருக்கும் நல்லது.
-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

கருத்துகள் இல்லை: