05 ஜூலை 2014

பெற்றோர்கள் வளர்ப்பும் நோன்பும்

எல்லா இடங்களிலும் ஒரு சிலர் நோன்பு பிடிப்பதில்லை.. அதற்கு காரணம் சிறுபிராயத்திலிருந்து மார்க்கக்கடமைகளின் சிறப்பை சொல்லி அதனை அப்பிராயத்திலிருந்தே பழக்காதது தான் பெற்றவர்கள் ஆஹா.. என் பிள்ளை எப்படி நோன்பு வைப்பான் தாங்க மாட்டான், ஸ்கூல் வேறு செல்ல வேண்டும் அதனால் வைக்க வேண்டாம் என்று சொல்லி அவர்களை ஆரம்பத்திலிருந்தே செல்லம் எனச்சொல்லி கெடுத்து வைப்பது தான், அவ்வாறு வளர்ந்தவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்ததும் திடீரென நோன்பு வைக்க அவர்களால் முடிவதில்லை

என்னைப்பொருத்தவரை நல்ல உடல் நலம் இருந்தும் நோன்பு பிடிக்காதவர்களுக்கு பெரும்பாலும் நாம் எப்படி வைக்க முடியும் என்ற பயமே காரணம். இதற்கு விதி விலக்காக நான்கு ஐந்து வயது முதலே நோன்பு வைக்கச்சொல்லி ஆசையூட்டி அப்படி வைத்து முடித்துவிட்டால் மிகப்பாராட்டி வளர்தெடுக்கும் பெற்றோர்களும் இருக்கத்தான் செய்கிறது. இத்தருணத்தில் எனது மிக இளம்பிராயத்தில் தனது இடுப்பில் சுமந்து இன்னும் கொஞ்ச நேரம் தான் இருக்கிறது, அதோ அந்த கடிகாரமுள் இந்த இடத்திற்கு வந்தது நீ நோன்பு திறந்து விடலாம் என என்னை வளர்தெடுத்த தாயாருக்கு வல்லவன் அல்லாஹ் நீண்ட ஆயுளும், நல்ல உடல் நலமும் கொடுத்து சிறப்பாக்கி வைக்க துஆ செய்கிறேன். ஆமீன்.
-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

கருத்துகள் இல்லை: