05 ஜூலை 2014

மாபாவி

விலங்குகள் எல்லாம் மனிதனை நம்புகிறது
மனிதன் தான் கழுத்தறுக்கிறான்!

**************

தழைத்து கிளைத்து நிழல்கொடுத்தது மரம்
தழலினில் காலூன்ற வழியில்லாத போதும் உணரகிறானில்லை, 
கொடூரமாக வெட்டிய மரங்களில் 
அவன் பேரக்குழந்தையின் அழுகுரலை!

*****************

இருக்கிறதென்று செலவழிக்கும் தண்ணீரோ அளவீடுக்கப்பால்,
வறண்டிருக்கும் நாவிற்கு சொட்டுமில்லை என்றானால்..
நீரே நீ கிடைத்தால் போதுமென்று தேடுகிறான்
உற்றபின் உயிரே மீண்டும் வந்தது போல் பெருமூச்சு..
அந்நிம்மதிக்கு அப்பாலோ மீண்டுமவன் நீரழிக்கும் மாபாவி.


-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

கருத்துகள் இல்லை: