20 ஜூலை 2014

மகனின் மழலை நோன்பு

சுல்தான் அஹமது நளீர்


J Mohaideen Batcha
என் செல்லக்கண்மணி அன்பு மகன் அஹமது நளீர் தனது ஐந்தாம் அகவையில் முதன் முறையாக இன்று ஒரு நோன்பை நிறைவாக்கியிருக்கிறார்.

அந்நாளில் இதே ஐந்தாம் அகவையில் நான் முதல் நோன்பு வைத்துக்கொண்டு மதியம் தாண்டிட பசியால் வாட எனது தாயார் என்னை தன் இடுப்பிலேயே சுமந்து ஆருதல் சொல்லி.. ஆருதல் சொல்லி.. என்னை அமைதிப்படுத்தி... அந்த ஆறரை மணியை தொடும் வரை என்னை தேற்றி அதிலும் சிலோன் ரேடியோவில் பாங்கு சொல்லும் போது அது தான் பாங்கு சொல்லிவிட்டார்களே என அந்த பாங்கிற்கே நோன்பை ஆவலாக திறந்த நிகழ்வெல்லாம் என் நெஞ்சத்திரையில் படமாய் வருகிறது.

அன்புச் செல்வம் அஹமது நளீர் எல்லா நலவளங்களும் பெற்று இறையருளும், இரசூல் நாயகத்தின் இதயமலரருளும், இன்னும் மெய்ஞானிகள் எல்லோர் அருளும் சூழ நிறைநலத்துடன் வாழ்ந்திடட்டும். தகைசால் தாங்களும் வாழ்த்துங்களேன்.
-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

கருத்துகள் இல்லை: