
நோன்பு திறக்கும் நேரம் கூட
தேம்பித் தேம்பி அழுதது மனது!
தொழப்போனேன் பள்ளிக்கு
தொய்வின்றி வியாபித்திருந்தது
அந்த அழிச்சாட்டியக்கொடூரங்களின் மீதான
கேள்விக் கொக்கிகள் என்னில் எங்கும்!
சிந்தனை எல்லாம் இன்று இதுதான்
சிந்திய இரத்தம் போதாதா இப்போதும் ஏன் என்று?
நாமெல்லாம் இரமலானை
புனிதமென்றும் அருள் தேடிடும் மாதமென்றும்
பக்தியில் மூழ்கிடும் போதினில்
அங்கே அதே இறைவனை நோக்கி
பல அபலைகளின் குரல்....
"இறைவா... நாங்கள் மட்டும் என்னபிழை செய்தோம்
இப்படி எங்களை சோதிக்கிறாயே" என்று...
மாற்றைப்பற்றி சிந்திக்கவே இயலாததாய்
தேம்பலும்... கூப்பாடும்..அழுகுரலும்
அவர்களின் இபாதத்தாய் ஆனதே!
வலிமையான அரசமைப்பும்
இராணுவ பலமும் அவர்களிடம்
குன்றினை கூட வசப்படுத்தமுடியாத
குன்றிப்போன அரசென்பதாய் ஒன்று மட்டும் இவர்களிடம்!
மிகப்பெரிய டேங்கிகள் அவர்களிடம்,
ஒரு ஓட்டை துப்பாக்கிக்கூட இல்லை
இந்த இளைஞர்களிடம்,
ராக்கெட் லாஞ்சரெல்லாம் அவர்களிடம்
பொறுக்கி எடுத்த கட்டிட இடிபாடுகளின்
கற்கள் மட்டுமே இவர்களிடம்!
இதையெல்லாம் வைத்து என்னதான்
செய்வதாம் இவர்கள்???
பக்கத்து வசிப்பிடம்
படுகொடூர சப்தத்தோடு
குண்டிற்கிறையான ஓலம் பார்த்து
இரண்டரை வயதேயான
தன் தம்பி திடுக்கிடுகிறானே என
தமையனவன் சற்றே அணைத்துக்கொண்டிருந்தான்,
செத்துக்கிடந்தனர் அவர்களிருவரும்
அதே கிடப்பிலே அணைத்தவாரே அடுத்தச்சனம்.
நேற்று முன் தின இஸ்ரேலிய தாக்குதலில்!
வழக்கமான நாள் பொழுதில்
அழிக்கவந்த குண்டுகள் மீதி இருந்த
குடும்பங்களின் எதிர்காலங்களை
கேள்விக்குறியாக்கிவிட்டு போக!!
சிக்குறக்கூடாதே என வீட்டிலிருந்து
வீதியிலே அலறலோடு பீதியிலே
வாலிபர்கள் நிறைந்த ஆண்கள் கூட்டம்
என் புள்ளகுட்டிங்கள்ளாம் போச்சே
என்றெ அழுதோடும் பெண்கள் கூட்டம்
பறிதவித்தோடிட..மீண்டும்.. மீண்டும்..
துறத்திக்கொண்டு வருகிறதே
விழும் குண்டுகளின் பிரமாண்ட சப்தமும்
உயிரை குதறும் அதிர்வும்..
சாவை போர்த்தும் இருளும்...!!!!!!!!!!!!!!!!
என்று தான் விடியுமோ அவர்களுக்கு
இறைவா!!!!??????
பாழ்பட்டிருக்கும் பலஸ்தீனமே
உன் இரணங்களுக்கு
மருந்து கிடைக்குமா????
நீ சுகமாவாயா?????
வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக