06 ஜூலை 2017

தமிழ் ஆசிரியரின் அமிழ்தான வாழ்த்து


எனது தமிழாசான் திருநாவுக்கரசு ஐயா அவர்கள் எனது இப்பிறந்த நாளுக்கு யாத்த வாழ்த்துக்கவிதை

தம்பி முஹைதீன் பாட்சாவுக்கு
இனியவை நாற்பது
நாங்கள் பெறாத பிள்ளைக்கு வரும் பிறந்தநாள்
எங்கள் பிறந்த நாள்களிலும்
இனித்து இனிப்பது.
ஞானிகள் ஆசான்கள்
நயம் மிக்க
நாவலர்கள் ஊட்டிய
அறிவுப்பால்
அருந்திய பிள்ளை!
இல்லத்தை,
உள்ளதைச்
சொல்லும் உள்ளத்தை,
தடுமாறிய பள்ளத்தை,
ஏற்கவியலா கள்ளத்தை
எழுதிக்காட்டிய
இனியவை நாற்பது
ஓர் இலக்கிய
வெல்லம்!
நாற்பது என்பது
நடுவுக்கும் குறைவு,
தமிழ்மகனே நீ
ஐந்திணை ஜம்பதாய்,
ஐந்திணை எழுபதாய்
திணைமாலை
நூற்றைம்பதாய்
அகநானூறாய்
நற்குணங்குடியாய்
நல் அருட்பாவாய்
வாழ்கவே!
பெருமான் மொழிபோல்
பெருகி மிளிர்கவே!


கருத்துகள் இல்லை: