07 ஜூலை 2017

காப்பியக்கோ விருந்து..



முன்பு புரவலர் விருந்து கொடுத்தார் இன்றோ புலவரவர் விருந்தளித்தார். 

நெஞ்சம் நிறைந்து அழைத்த விருந்துக்கு சென்றோம், சுவைமிகுந்த உணவாலும், அன்பின் அதீத உபசரிப்பாலும் வயிறும், மனமும் நிறைந்து வந்தோம்.


ஆமாம் அறிஞர் பெருந்தகை இக்பால் சார் சொன்னது போல காப்பியக்கோ அவர்களது விருந்தோம்பல் எங்களை திக்குமுக்காட செய்து விட்டது. 

உண்மையில் பெருந்தகை இக்பால் சார் வேண்டியது என்னவோ ஒரு சிறிய அளவிலான தேனீர் விருந்தே ஆனால் காப்பியக்கோ அவர்கள் அதை ஏற்கவில்லை, நான் சொன்னாலும் எங்கள் வீட்டு பெண்மணிகள் அதை ஏற்கமாட்டார்கள், நீங்கள் எல்லோரும் இல்லம் வர வேண்டும் எங்கள் இலங்கை உணவை உள்ளம் மகிழ சாப்பிட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொண்டார். 

அதன்படி இரவு விருந்திற்காய் துபாயில் இருக்கும் காப்பியக்கோ அவர்களின் மூத்தமகனார் வீட்டிற்கு சென்றோம், உள்ளார்ந்த வரவேற்பு, எல்லோரும் கூடி வர வேற்றனர். அவர்களின் முகத்தில் தான் எத்தனை ஆனந்தம், எத்தனை மகிழ்ச்சி.

வீடே இரம்மியமான சூழல், மழலை மணம் நிறைந்திருந்தது, வீட்டின் அலங்காரமும் அன்பின் தோரணங்களும் காப்பியக்கோவின் கவிதை மனதை இன்னும் கவித்துவப்படுத்தும் என்பதில் ஐயமில்லை. பேரப்பிள்ளைகள் சூழ காப்பியக்கோ மகிழ்ந்திருப்பதை காண மனமெல்லாம் நிறைவு, இன்னும் இன்னும் இன்னும் அவர்கள் இதே மகிழ்வுடன் இருந்து சிறப்புடன் வாழவும் இச்சமூகத்திற்கு நல்ல பல ஆக்கங்கள் தரவும் மனதால் வேண்டிக்கொண்டோம்.

சென்றவுடன் பழரசம் பறிமாறப்பட்ட்து, சில உரையாடல்களுக்கு பிறகு சூப்பில் ஆரம்பித்து வித விதமான இலங்கை உணவு வகைகள், இறைச்சி வகைகளும், மீன் உணவும், மரக்கறிஉணவுமென எதிலும் குறையில்லை உணவுப்பதார்த்தங்களை சிறப்போடு சமைத்த்து மட்டுமல்ல அத்தனை அழகுற ஸ்டார் ஹோட்டல்கள் தோற்க்கும் அளவுக்கு அழகூட்டி வைத்திருந்தனர் எல்லாமிருக்க காப்பியக்கோவும், அவரது இணையரும் இனிக்க.. இனிக்க எடுத்து வைத்தனர். காப்பியக்கோவின் மூத்த மகனார் சிறுபிள்ளையென ஒடி ஓடி சென்று எல்லாவற்றையும் குதூகளத்துடன் எடுத்துவந்து பாசமுடன் பறிமாறினார். இளைய மகனாரும் இணைந்து உபசரித்தார்.

எல்லாம் சிறப்பாக இருந்தாலும் விருந்தில் அந்த இரால் பிரியாணியை அடிச்சுக்கவே முடியாது, பிரமாதம். ஃபீப் வருவல், சிக்கன் ப்ரை எல்லாம் அவ்வளவு பதம். பைன் ஆப்பிளை காரம் கொடுத்து சமைத்து வைத்தது புதுமை இப்படி சொல்லிக்கொண்டே போகலா…….ம். அவ்வளவு வெரைட்டி. கடைசியில் விருந்து முடிந்த்து என்றால் டெசர்ட் சாப்பிடாமல் எப்படி விருந்து முடியும் என்றார் காப்பியக்கோ.. பிற்கு ஃப்ரஸ் ஃப்ரூட் சலாடும் ஐஸ்கிரீமும் வந்தது அத்தோடு பனை கரிப்பட்டி வெள்ளப்பாகு, தயிர் அடடே! அற்புதம் என அதிலும் நிறைய வெரைட்டி. அல்ஹம்துலில்லாஹ். போதும் வாப்பா என சொல்ல பெரிய மகன் எங்கள் இலங்கை வழக்கப்படி சுக்கு காப்பி தான் கடைசி ப்னீசிங் அதனால் அதை மறுக்கவே மறுக்காதீர்கள் என்றார். அதுவும் சுடச்சுட வர சாப்பிட்டு முடித்தோம், ஆனாலும் இன்னும் சாப்பாட்டின் ருசி நாவிலும் நெஞ்சிலும் ருசிக்கத்தான் செய்கிறது. மறக்க முடியாத விருந்து.

இனிய விருந்து முடிந்தாலும் எங்கள் அன்புள்ளத்தின் அளவலாவல் தொடரக்கூடியது. மகிழ்ச்சியுடன் விடை பெற்றோம், வாசல் வரை வந்து காப்பியக்கோவும் அவரது இல்லத்தினரும் எங்களை வழியனுப்பினர். 

தமிழ் எங்களை இணைத்தது நம் அன்னைத்தமிழ் புதிய இலக்கியத்தை அதுவும் அழிவுறாப்புகழ் இஸ்லாமிய இலக்கியத்தை விரைவில் அது தனக்குள் கைகொள்ளும். அது வளர்ந்து வருகிறது இதுவரை தமிழிலக்கியம் பெறாத ஓர் அழகோவியம் உருப்பெருகிறது அதை தீட்டும் ஓவியர் காப்பியக்கோ இவ்வரிய இலக்கியம் வளர்ப்பவர் அறிவியல் அறிஞர்.

-வழுத்தூர் ஜா.முஹையத்தீன் பாட்ஷா
06-07-2017

கருத்துகள் இல்லை: