19 ஜூலை 2017

நாளை விடியும்

நாளை நயம்பட விடியும்
காலை கலைநயம் புரியும்
ஆனந்த மெளனம் அழகினைக் கூட்டும்
தேனினும் இனிதாய் வானம் சுவைக்கும்
கால்களை அலைகள் துழாவி மொய்க்கும்
தோள்களில் சுகமான கிளி வந்தமரும்
இதம் தரும் கானம் செவிகள் நுகரும்
மேகம் சூழ நடையது இருக்கும்
நிலவு சிரித்து என்னோடு பேசும்
நட்சத்திரங்கள் கைகளில் சிக்கும்
விரலதுபடவே கடல்நீர் இளநீராகும்
குடைகள் பறந்திட மழை நீராட்டும்
முடிவிலா தூரம் கண்கள் காணும்
புகழின் சட்டை மேனியில் மின்னும்
இனியதோர் ரசம் பருகி தாகம் தீரும்
அதிசய இசைமேடையில் நம் சந்திப்பிருக்கும்
ஜா.முஹையத்தீன் பாட்ஷா
18-07-2017

கருத்துகள் இல்லை: