09 டிசம்பர் 2011

கர்பலா மாதியாகம்!



பல்லவி
மன்னர் ஹுஸைன் மாதியாகத்தில்
எந்நாளும் உலகம் தஞ்சம்
எம்மான் நபி குலக்கொழுந்துகள்
சோகங்கள் எதையும் மிஞ்சும்

அனுபல்லவி
முஹரம் பத்தின் நினைவு வந்தால்
மூமின் நெஞ்சில் ஈட்டி பாயும்
நாதியின்றி நபியின் குடும்பம்
அந்தோ ஆசூராவே..!

சரணங்கள்
நாட்டை ஆளகடிதங்கள் போட்டவர்கள்
வேட்டை நாய்களிடம் மாட்டவைத்தனரே
காட்டிக் கொடுத்தனரே
வாக்கு மாறினரே
அகிலம் வாழவைத்த நபிகள் குடும்பத்தின்
இரத்தம் குடிக்க வேண்டி
அரக்கத் தனம்மீது ஆடி
நெருப்பாய் சிரித்தார்கள் கூடி
அரசபதவி மோகம் வேண்டி
ஏஜீது தீது செய்தான்..!

சத்தியத்தை நிலை நாட்டுதற்கே
பெரும் தியாகம் செய்தனரே
தம் உயிரெல்லாம்
இன் னுயிரையெல்லாம்
இதயம் கருகிவிடும் சோகம் நடந்ததம்மா
குழந்தை சகீனா தாகம்
அஸ்கர் சிசுவின் சோகம்
அதுதான் இன்றைக்கும் சாபம்
அஹ்லுல்பைத்தை கொடிய களத்தில்
காத்தார் ஜைனப் தாயே..!


27-01-2007 ஹிஜ்ரி 1428 முஹரம் பிறை 10 இரவு 11 மணிக்கு எழுதியது


குறிப்பு; இப்பாடல் கர்பலாவின் உடைய நெஞ்சை உருக்கும் சரித்திரம் தெரிந்தவர்களுக்கு உணர்வு ரீதியாக தாக்கத்தைக் கொடுக்கும். கர்பலாவின் கொலைகளத்தில் கொடிய சூழ்ச்சியால் நபிகளாரின் குலக்கொழுந்துகள் கருவறுக்கப்பட்ட சரித்திரத்தை இளைஞர்கள் நடுநிலையான சிறப்பான ஆசிரியர் எழுதியதை தேடிப்பிடித்து படிக்க வேண்டும் அவ்வாறு படித்து உணர்ந்தால் அவர்கள் இஸ்லாத்திற்காக செய்த தியாகத்தை உணரலாம் மேலும் எதற்காக அந்த போராட்டம் என்பது அதிலிருந்து இஸ்லாம் எவ்வாறு எழுச்சி அடைந்தது அவர்கள் தங்களை தியாகம் செய்து இந்த மார்க்கத்தை எவ்வாறு புதுப்பித்தார்கள் என்பது தெளிவாகும். இன்ஷா அல்லாஹ். ஆமீன்!

-ஜே.எம்.பாட்ஷா

கருத்துகள் இல்லை: