11 டிசம்பர் 2011

அராபிய மண் அங்கலாய்க்கிறது...!




அல்லாஹ்வின் தூதர்
அருட்பத மலர் சுமந்த
அராபிய மண் இன்று
அங்கலாய்க்கிறது...!

வெதும்பிக் குமுறி
வெறுத்துக் கதறி
சதா சபித்து
அவர்களிடமே முறையிடுகிறது..!

நீதநபியே என்னைக் கொஞ்சம் பாருங்கள்!
நீங்கள் வெருட்டிய சாத்தான்கள்
ஒன்று சேர்ந்து விட்டதோ..!

நீங்கள் சுத்தம் செய்த இடங்களில்
சாக்கடை சங்கமிக்கிறதே..!

சன்மார்க்கம் வளர்த்த மண்
தன்மானம் விற்றுக்கிடக்கிறதே..!

கத்தூரி வலம் வந்த நகர்களில்
செத்தவாடை அடிக்கிறதே..!

ஆனந்தமாய் ரசிக்க வேண்டிய கண்களில்
அழுக்குத்திரை சூழ்கிறதே..!

தேனான வேத ரீங்காரம் கேட்க வேண்டிய காதுகளில்
தேவை இல்லாதது கேட்கிறதே..!

பண்பாடு வளர்த்த அரபத்திலே
ஆடை துறவரம் நடந்து
அசிங்கம் தின்ம் அரங்கேருதே..!

நல்வாழ்வு அளித்து
நறுமணம் கொடுத்த
நபிவழி இங்கே
நசுங்கி கிடக்குதே!


-ஜே.எம்.பாட்ஷா


8 வருடங்களுக்கு முன் எழுதியிருப்பேன்..!

கருத்துகள் இல்லை: