
இருக்கின்ற அழுக்கை
தொலைக்க நினைக்கையில்
தெரியவில்லை கொஞ்சம்
ஒளிந்து மீந்திருந்தது!
தொலைக்க வேண்டியது
இருக்கக்கூடாதது தான்!
இருந்து விட்டு போகட்டும்
துவைத்து தொலைக்கும் அளவுக்கு
சேரும் வரை!
என்று எண்ண நேரலாம்..!
ஆனாலும் நல்லவைப் பக்கம்
நெருங்காது தள்ளியே
புறந்தள்ளியே வைப்போம்!
தூய்மையோடு
தூசுகள் கலக்கக்கூடாது
வாய்மையோடு
பொய்மைமை சேரவே கூடாது
தூய்மையை அணியும் பொது
அடையும் நல்லுணர்வு
அழகிய புத்துணர்வு
மனதிலிருந்து முகம் தாவும்.
அழுக்கை அணிகையில்..
கைகள் எடுதணிந்தாலும்
மனம் ஏசுவதை கேட்டிருக்கிறோமே!
பின் ஏன் அந்த அழுக்குகள்
நம்மோடினி வேண்டாம்!
வேண்டுக என்றென்றும் தூய்மை!
சில நேரம்
நாம் கவனிக்க தவறுவதன்
காரணி கொண்டு அவைகள்
சற்றே ஜீவன் பெறுகின்றது
நச்சுக்கள் பிறந்தாலே
நல்லவைக்களுக்கெல்லாம் கேடுதான்
கொல்வதில் தவறில்லை
ஆனாலும் ஏனோ
தெரியவில்லை கொஞ்சம்
ஒளிந்து மீந்திருந்தது!
தொலைக்க வேண்டியது
இருக்கக்கூடாதது தான்
-ஜா.முஹையத்தீன் பாட்ஷா
2 கருத்துகள்:
Arumai Sir!
நன்றிகள் உரித்தாகுக! துரை டேனியல்
கருத்துரையிடுக