13 டிசம்பர் 2011

ரஜினி..முத்து..!



பிறை நிலவாய் பிறந்து
முழுநிலவாய் ஒளிரும்
முத்து மதியே!

உழைப்பில் நீ எறும்பு
களைப்பறியா இரும்பு
வீரத்தில் நீ சிங்கம்
ஓரத்தில் நின்றால்
உனக்கு பங்கம்!
வா! எங்களுக்காக வா!!

இளைய தலைமுறைக்கு
திரை அறையில் மட்டுமல்ல
வாழ்வியல் வழிமுறைக்கும் மன்னவனே
நீ கொடுப்பதோ அதிக தானம்,
நீ அரசியலில் காட்டுவதோ நிதானம்

ஆனாலும்..,
வேலைதெரியாத – பொற்கொல்லர்கள்
வைரத்திற்கு பட்டைதீட்டுகிறோம் என்கிறார்கள்
சேலை வேட்டியால் மட்டுமே
அவர்களால் கவரத்தெரியும் மக்களை,
நாளை நமதே வா!

குறிஞ்சி மலரே!
எப்போது மலர்வாய் என
ஏங்கியிருக்கிறோம் –நீ
மலர் காட்சிக்கு மட்டுமல்ல
எங்களின் வாழ்வில்
மணம் பரப்பவும் தான் வா!

கோடிகள் மட்டுமல்ல – எங்கள்
நாடியும் உன்கையில் தானே தலைவா!

-ஜா.மு.பாட்ஷா

ஜூலை 1995 ஆம் வருடம் (16 வருடங்களுக்கு முன், 17 அகவை எனக்கிருக்கும் அப்போது) ரஜினி காந்த்-ன் முத்து திரைப்படம் வந்த நேரம், அவர் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட அந்த தருணத்தில் சில நண்பர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க எழுதிக்கொடுத்தது, அந்த பிள்ளைத்தன நினைவுகள் இன்னும் என் மனதில் அப்படியே பசுமையாகத்தான் இருக்கிறது.
-ஜே.எம்.பாட்ஷா

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

Why should Tamilians celebrate Rajini? What is the good thing that he brings to the Tamil Community. He has a cowardly personality in real life. Only the reel life shows him as a big humungous figure. He does not have guts