
இப்ராஹீம் நபியின் அழைப்பை ஏற்று
இந்தியா விலிருந்து சென்றவர்களே வருக.. வருக...
சர்தார் நபியின் சந்நிதானம் சென்று சலாமுரைத்து
சரணமடைந்த சத்தியவான்களே வருக.. வருக...
காஃபா வெனும் இறையாலயத்தை தரிசித்து
கண்ணீரால் கறை போக்கியவர்களே வருக.. வருக...
சஹாபாக்களெனும் சங்கைக்குரியவர்களை
சாந்தியோடு சம்பாசித்தவர்களே வருக.. வருக...
சாரா அம்மையார் சஞ்சலத்தோடு ஒடிய
“சஃபா மர்வா”-க்களை சந்தித்தவர்களே வருக.. வருக...
இஸ்மாயில் நபியின் பாதத்திலுதித்த
பாலைவன பன்னீர் “ஜம் ஜம்” சுவைத்தவர்களே வருக.. வருக...
“ஹஜருல் அஸ்வத்”-தெனும் சுவனக் கல்லை
களிப்புற தொட்டுச்சுவைத்தவர்களே வருக.. வருக...
ஷைத்தானுக்கு கல்லெறிந்து
ஷைத்தானியத்தை எறிந்து விட்டவர்களே வருக.. வருக...
கண்ணீல் கண்ணீர் பெருக...பெருக...
அருள் மணம் தருக... தருக...என்று
இருகரம் ஏந்தியவர்களே
இன்று பிறந்த பாலகனைப் போல் - நீர்
என்றும் வாழ்கவே...!
-ஜே.எம்.பாட்ஷா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக